

மங்கையர் மலர் இதழில், 2019 ஆம் ஆண்டு, மன நல ஆலோசகர் விஜயலக்ஷ்மி பந்தையன் அவர்கள் 'நம் மனம் நம் கையில்’ என்ற தலைப்பில் கட்டுரைகளை தொடர்ந்து 15 வாரங்கள் எழுதினார். அத்தொடரிலிருந்து சில பகுதிகள் இங்கே இத்தொடரில்...
தொடரின் அனைத்துப் பகுதிகளையும், மேலும் பல சுவாரஸ்யமான கதை, கட்டுரைகளையும் கல்கி களஞ்சியத்தில் சந்தா செலுத்திப் படிக்கலாம்.
சந்தா செலுத்த...
மெல்ல மெல்ல மாற்றம் வரும்! - விஜயலக்ஷ்மி பந்தையன் - மன நல ஆலோசகர் Alpha Mind Trainer
மனம் என்ற அதிசயமான சக்தி நமக்குள் இருந்துகொண்டு எப்படி எல்லாம் நம்மை ஆட்டிவைக்கிறது? நம் மனம் ஏன் இப்படி நமக்குப் பிடிக்காத விதத்தில் செயல்படுகிறது?
அம்பிகாவின் மனமும் அப்படித்தான் அவரிடம் ஒரு கேள்வியை எழுப்பி இருந்தது. அவரது மகனுக்கு திருமணம் முடிந்து ஒரு மாதம்தான் ஆயிற்று. அதற்குள் தனக்குள் ஏற்பட்ட சில மாற்றங்களைக் கண்டு திடுக்கிட்டுவிட்டார்.