

மங்கையர் மலர் இதழில், 2019 ஆம் ஆண்டு, மன நல ஆலோசகர் விஜயலக்ஷ்மி பந்தையன் அவர்கள் 'நம் மனம் நம் கையில்’ என்ற தலைப்பில் கட்டுரைகளை தொடர்ந்து 15 வாரங்கள் எழுதினார். அத்தொடரிலிருந்து சில பகுதிகள் இங்கே இத்தொடரில்...
தொடரின் அனைத்துப் பகுதிகளையும், மேலும் பல சுவாரஸ்யமான கதை, கட்டுரைகளையும் கல்கி களஞ்சியத்தில் சந்தா செலுத்திப் படிக்கலாம்.
சந்தா செலுத்த...
குழப்பங்கள் வேண்டாமே! - விஜயலக்ஷ்மி பந்தையன் - மன நல ஆலோசகர் Alpha Mind Trainer
அகல்யா மிக நல்ல உத்தியோகத்தில் பெரிய பதவியில் இருக்கும் பெண். வயது 40. அவரது மன வருத்தத்தைச் சொன்னார்.
"நான் எப்பொழுதும் எனது முழு உழைப்பையும் கொடுத்துதான், எந்த வேலையையும் செய்துமுடிப்பேன். அதனால் எனது சக ஊழியர்கள் மற்றும் மேலதிகாரியிடம் எனக்கு மிக நல்ல பெயர் உண்டு. 'சிரமமான வேலையாக இருந்தால் உடனே அகல்யாதான் என் நினைவுக்கு வருகிறார்' என்றுகூட எனது மேலதிகாரி பல முறை சொல்லி இருக்கிறார்.