100 வயதுக்கு மேல் வாழ ஆசையா? - மரணத்தில் இருந்து தப்ப இந்த 'ஒன்றை' சரியாகச் செய்யுங்கள்!

People who lived more than 100 Years
People who lived more than 100 Years.
Published on

மனித வாழ்க்கைக்கும், நம்மைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழலுக்கும் இடையே ஒரு பிரிக்க முடியாத பந்தம் உள்ளது. நாம் அன்றாடம் உண்ணும் உணவு, குடிக்கும் நீர், சுவாசிக்கும் காற்று, சூரிய ஒளி என நம்மைச் சூழ்ந்துள்ள அனைத்தும் நம் உடலை நேரடியாகப் பாதிக்கின்றன. இயற்கையோடு ஒரு நெருங்கிய ஒத்துழைப்பில்தான் மனித உடல் இயங்குகிறது. 

எனவே, நாம் உட்கொள்ளும் உணவு சுத்தமானதாகவும், அருந்தும் நீர் மாசற்றதாகவும், சுவாசிக்கும் காற்று தூய்மையானதாகவும் இருக்க வேண்டியது மிக அவசியம். ஆனால், எவ்வளவு விழிப்புடன் இருந்தாலும், சில சமயங்களில் அறியாமலேயே மாசுபட்ட உணவு, நீர் மற்றும் காற்று நம் உடலுக்குள் நுழைய வாய்ப்புள்ளது.

இன்றைய வேகமான உலகில், பாக்கெட் உணவுகள், ரசாயனம் கலந்த பயறு வகைகள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்ட பழங்கள் ஆகியவை நம் உணவுத் தட்டில் சாதாரணமாக இடம்பெறுகின்றன. இவற்றில் உள்ள நச்சுப் பொருட்கள் மெதுவாக நம் உடலுக்குள் படிந்து, நாம் உணராத வகையில் தேங்க ஆரம்பிக்கின்றன. இந்த நச்சுப் பொருட்களின் தேக்கம், நாளடைவில் பலவிதமான உடல்நலப் பிரச்சனைகளாக வெளிப்படுகிறது.

நம் உடலுக்குள்ளேயே ஒரு அற்புதமான இயற்கை சக்தி செயல்படுகிறது – அதுதான் 'பிராணசக்தி'. நம்முள் நுழையும் தேவையற்ற கழிவுகளையும் நச்சுப் பொருட்களையும் வெளியேற்ற இந்தச் சக்தி தொடர்ந்து முயற்சி செய்கிறது. இந்த இயற்கையான சுத்திகரிப்புச் செயல்தான் சில சமயங்களில் நோய் என்ற வடிவத்தில் வெளிப்படுகிறது. 

உண்மையில், நோய் என்பது ஒரு எதிர்வினை மட்டுமே – உடலைச் சுத்தப்படுத்தும் ஒரு வழி. உள்வாங்கும் உணவு, நீர், காற்று மற்றும் வெளித்தள்ளும் வியர்வை, மூச்சு, சிறுநீர், மலம் போன்ற இயக்கங்கள் சரியாக இயங்கும்போது, உடல் ஆரோக்கியமாக இருக்கும். நாம் நல்ல உணவுகளை உட்கொண்டாலும், உடல் அதன் அனைத்துப் பகுதிகளையும் ஏற்றுக்கொள்வதில்லை. தேவையானதை மட்டும் தக்கவைத்துக்கொண்டு, மீதியை கழிவாக வெளியேற்றிவிடுகிறது. நீர் மற்றும் காற்றுக்கும் இதே விதி பொருந்தும்.

இதையும் படியுங்கள்:
தெரியாமல் கூட உங்க வீட்டு கழிவு நீர் அமைப்பில் இந்த விஷயங்களை போட்டுடாதீங்க!
People who lived more than 100 Years

இந்தக் கழிவுகள் வியர்வை, மூச்சு, சிறுநீர் மற்றும் மலம் ஆகிய வழிகள் வழியாக உடலை விட்டு வெளியேறுகின்றன. இந்தக் கழிவு நீக்கச் செயல்முறைகளில் ஏதேனும் சீர்கேடு ஏற்பட்டால்தான் நோய்கள் உருவாகின்றன. இந்தச் செயல்முறைகள் முற்றிலுமாக முடக்கப்பட்டால், அதுவே உயிருக்கு ஆபத்தான நிலைக்கும் வழிவகுக்கும். 

நோய்கள் தவிர்க்க முடியாதவை என்று நாம் கருதினாலும், உண்மையில் நோய் என்பது உடலின் சுத்திகரிப்பு முயற்சி என்பதை நாம் உணர வேண்டும். அந்த முயற்சிக்கு நம்மால் முடிந்த அளவுக்குத் துணை நிற்கும் ஒரு வாழ்க்கை முறையையே நாம் தேர்வு செய்ய வேண்டும். நம் உடலின் இயற்கை சுத்திகரிப்பு செயல்முறைகளை ஆதரிக்கும் ஒரு வாழ்க்கை முறையை வாழ்ந்தால், ஆரோக்கியமாக நூறாண்டுகளுக்கும் மேல் வாழலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com