நீரிழிவு நோய் தாக்கத்தைக் குறைக்கும் ஊற வைத்த வால்நட்!

நீரிழிவு நோய் தாக்கத்தைக் குறைக்கும் ஊற வைத்த வால்நட்!

வால்நட் எனப்படும் அக்ரூட் பருப்புகளை தினசரி ஊற வைத்து சாப்பிடுவது நீரிழிவு நோயைத் தடுக்க உதவுகிறது. இதில் உள்ள தனித்துவமான பண்பு காரணமாக, நீரிழிவு நோயாளிகள் ஊறவைத்த அக்ரூட் பருப்புகளை உணவில் சேர்த்துக்கொள்வது எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஊற வைத்த அக்ரூட் பருப்புகளில் கொழுப்பை குறைக்கும் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்சிஜனேற்ற பண்புகள் உள்ளன. இது உடலில் நீரிழிவு நோயினால் ஏற்படும் இதய பிரச்னைகள் மற்றும் உடல் பருமன் போன்ற பாதிப்புகளை குறைப்பதற்கு உதவுகிறது.

பச்சை அக்ரூட் பருப்புகள் அல்லது எந்த ஒரு விதைகளிலும் உள்ள டானின்கள், ஊட்டச்சத்து எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளன. மேலும், இது இரும்பு போன்ற சில ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுவதை தடுக்கவும் உதவுகிறது. அக்ரூட் பருப்புகளை ஊற வைப்பதன் மூலம் அதன் சருமத்தில் இருக்கும் அழுக்கு, தூசி மற்றும் எச்சங்களை நீக்க உதவுகிறது.

அக்ரூட் பருப்புகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், எலாஜிக் அமிலம், ஃபிளாவனாய்டுகள், வைட்டமின் ஈ, மெலடோனின், டோகோபெரோல், செலினியம் மற்றும் அந்தோசயின்கள் போன்றவை நிரம்பியுள்ளதாக ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது. மேலே குறிப்பிட்டுள்ள கலவைகள் நீரிழிவு நோயைக் குறைக்க அல்லது நீரிழிவு நோயாளிகளின் குளுக்கோஸ் அளவை நிர்வகிக்க உதவுகிறது.

ஊற வைத்த மற்றும் உலர்ந்த அக்ரூட் பருப்புகளைக் கொண்டு வீட்டிலேயே கிரானோலா பார்க தயார் செய்யலாம். ஊற வைத்த அக்ரூட் பருப்புகளை தயிரில் சேர்த்து உண்ணலாம். ஊற வைத்து நறுக்கிய அக்ரூட் பருப்புகளை ஒரு பழ சாலட்டில் சேர்க்கலாம். ஊற வைத்த மற்றும் உலர்ந்த அக்ரூட் பருப்புகளைக் கொண்டு வீட்டிலேயே கிரானோலா பார்க தயார் செய்யலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com