ASI Place
ASI Place 
கலை / கலாச்சாரம்

சமீபத்தில் தொல்லியல் துறையினர் கண்டுபிடித்த வரலாற்று சிறப்புமிக்க கண்டுபிடிப்புகள்!

பாரதி

இப்போது பூமியில் வாழும் மக்கள் வரலாற்றை அறிவதற்கு பெரிய அளவில் உதவிபுரிபவர்கள் தொல்லியல் துறையினர்கள். அந்தவகையில், சமீபக் காலத்தில் தொல்லியல் துறையினர் கண்டுபிடித்த மிகச் சிறப்புமிக்க கண்டுபிடிப்புகளைப் பற்றி பார்ப்போம்.

Ishvagu Coins:

Ishvaku coins

இக்ஷ்வாகு அல்லது சூரிய வம்சம் ஆட்சிபுரிந்த காலக்கட்டத்தில் பயன்படுத்தப்பட்ட பானைகளுடன் சேர்ந்து சுமார் 3, 730 நாணயங்கள் தொல்லியல் துறையினர்களால் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த நாணயங்களின் ஒரு பக்கத்தில் யானை சின்னமும், மற்றொரு பக்கத்தில் உஜ்ஜைன் சின்னமும் இருந்தன. இவை தெலுங்கானாவில் உள்ள பானகிரியில் கண்டுப்பிடிக்கப்பட்டன. இஷ்வாகு வம்சம் என்பது ராமாயண காலத்தின் ராமனுடைய ரகுவம்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

People living places

Gujarat Vadnagar

குஜராத்தின் வாட்நகர் என்றப் பகுதியில் 3,500 வருடங்களாக ஒரே இடத்தில் மக்கள் வாழ்ந்து வந்த ஒரு பகுதி கண்டறியப்பட்டது.

Geoglyph Circle:

Mudichu Thalapalli

தெலுங்கானா மாநிலம், மேட்சல்-மல்காஜ்கிரி மாவட்டத்தில் உள்ள முடிச்சு தலப்பள்ளியின் புறநகரில், 3,000 ஆண்டுகள் (Old Iron Age Period) பழமையானதாகக் கூறப்படும் வட்ட வடிவில் உள்ள புவியியல் ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Rock Paintings:

Bandhavargh paintings

மத்திய பிரதேசத்தின் பந்தவார்க் பகுதியில் சுமார் 1500 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் இருந்தவை கண்டறியப்பட்டன. ஆனால், அந்தக் காலக்கட்டத்தின் நாகரிகத்தை பற்றிய கண்டுபிடிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

Antiquities:

Keeladi

தமிழ்நாட்டின் 8 இடங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் கீழடியில் படிகக் கல்லும் கண்டறியப்பட்டது குறிப்பிட வேண்டிய ஒன்று.

Well Designed Drainage:

Raigad Fort

மகாராஷ்திராவில் உள்ள ராய்கட் கோட்டையில் நன்றாக வடிவமைக்கப்பட்ட வடிகல் அமைப்பு இருந்ததையும், போர்க்காலங்களில் தப்பிச் செல்வதற்காக ஒரு ரகசிய வழி இருந்ததையும் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பருவநிலை மாற்றங்களில் இருந்து நம்மைப் பாதுகாத்து கொள்வது எப்படி?

நீங்க சீக்கிரமா உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்றீங்களா? ப்ளீஸ், இது மட்டும் வேண்டாமே! 

காகத்திற்கு உணவு வைப்பதன் அவசியம் என்னவென்று தெரியுமா?

அமிதிஸ்ட் கற்களைப் பயன்படுத்தினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

கண்களைக் கட்டிக்கொண்டு பெருமாளுக்கு கிரீடம் சாத்தும் கோயில் எது தெரியுமா?

SCROLL FOR NEXT