Why should young people be taught about the environment?
Why should young people be taught about the environment? 
பசுமை / சுற்றுச்சூழல்

சுற்றுச்சூழல் பற்றி ஏன் இளைஞர்களுக்குக் கற்பிக்கப்பட வேண்டும்?

கிரி கணபதி

வேகமாக உருவெடுத்து வரும் நகரமயமாக்கல் மற்றும் தொழில்மயமாக்கல் போன்றவற்றால் இந்திய தேசம் போராடி வரும் நிலையில், சுற்றுச்சூழல் பொறுப்புணர்வை மக்கள் மத்தியில் தூண்டுவது இன்றியமையாததாகும். குறிப்பாக, இந்தியக் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு அதிகம் தேவைப்படுகிறது.

சுற்றுச்சூழல் பற்றி ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்?

இந்தியாவில் உள்ள விலங்குகளும், தாவரங்களும் நாம் நம்ப முடியாத பன்முகத்தன்மையைக் கொண்டுள்ளன. உலகில் உள்ள பல்லுயிர் பெருக்கத்தின் மையமாக இந்தியா உள்ளது எனலாம். இருப்பினும், இது சார்ந்து மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லாததால் நமது சுற்றுச்சூழலுக்குப் பெரும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே, சுற்றுச்சூழல் பற்றி குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் கற்றுக்கொடுப்பதன் மூலமாக, இந்தியாவின் தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்பை பாதுகாக்கும் உணர்வு அவர்களுக்கு ஏற்படுகிறது.

அத்துடன், காலநிலை மாற்றங்களால் ஏற்படும் தாக்கங்கள் ஏற்கெனவே இந்தியாவில் தெளிவாகத் தெரிகிறது. மாறிவரும் வானிலை மற்றும் தீவிர நிகழ்வுகளால் இந்த சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதை இளைஞர்கள் தெரிந்துகொள்வதன் மூலமாக காலநிலை மாற்றத்தின் காரணங்களையும் விளைவுகளையும் அவர்கள் புரிந்துகொண்டு, அதற்கான தீர்வுகளில் அவர்களின் பங்களிப்பை வழங்குவதற்கு வழிவகுக்கும்.

அத்துடன், குழந்தைகளும் இளைஞர்களும்தான் இந்த கிரகத்தின் எதிர்காலம். அவர்களுக்கு சுற்றுச்சூழல் கல்வியை வழங்குவதன் மூலமாக, நமது கிரகத்தைப் பாதுகாப்பதற்கான விதை அவர்கள் மனதில் விதைக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் அவர்களுக்கு உந்துதல் ஏற்படும்.

இதற்காக பள்ளிகளில் பசுமை திட்டங்கள் கொண்டுவந்து மாணவர்களை இயற்கையுடன் ஒன்ற வைத்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற நடைமுறைகளை அவர்களுக்குக் கற்பிக்கலாம். மேலும், இந்தியாவில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், சமூக அமைப்புகளு,ம் மரம் நடும் நிகழ்வுகள், கழிவுகளை நீக்கும் நிகழ்வுகள் போன்றவற்றை ஏற்பாடு செய்து இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.

இதுபோன்ற முன் முயற்சிகளை நாம் எடுப்பதன் மூலமாகவே, குழந்தைகளும் இளைஞர்களும் நமது சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டு செயல்படுவார்கள். அவர்களால் மட்டுமே வளமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள முடியும்.

கொளுத்தும் வெயிலிலும் ஒரு நன்மை இருக்கிறது; எப்படி தெரியுமா?

அரிசோனா பாலைவனத்தில் பயிற்சி செய்யும் நாசா...  காரணம் தெரிஞ்சா ஆடிப் போயிடுவீங்க! 

IPL 2024: ருதுராஜிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்படலாம் – இர்பான் பதான் எச்சரிக்கை!

இதய மாற்று அறுவை சிகிச்சையில் ஒரு புதிய மைல்கல்!

பெண்களுக்கு கைமேல் பலன் தரும் கன்னிகா பரமேஸ்வரி வழிபாடு!

SCROLL FOR NEXT