Palappazham Paniyaram Recipe 
உணவு / சமையல்

என்னது! பலாப்பழ பணியாரமா? புதுசா இருக்கே! 

கிரி கணபதி

பலாப்பழம் தமிழ்நாட்டில் முக்கனிகளில் ஒன்றாகும். இதன் சுவையான மணக்கும் சதை, பல்வேறு வகையான உணவு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. அப்படிதான், பலாப்பழத்தை பயன்படுத்தி பணியாரம் செய்வது எப்படி என இப்பதிவில் பார்க்கப் போகிறோம். இதன் தனித்துவமான சுவை உண்மையிலேயே உங்களுக்கு மிகவும் பிடிக்கும். குறிப்பாக, இதை செய்வது மிகவும் எளிது என்பதால், ஒருமுறையாவது கட்டாயம் நீங்கள் முயற்சித்துப் பார்க்க வேண்டும். 

தேவையான பொருட்கள்:

  • பலாப்பழம் - 250 கிராம் (விதைகள் நீக்கப்பட்டவை)

  • அரிசி மாவு - 1 கப்

  • ரவை - 1/2 கப்

  • தேங்காய் துருவல் - 1/2 கப்

  • ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்

  • சர்க்கரை - 1/2 கப் (தேவைக்கேற்ப)

  • உப்பு - 1/4 டீஸ்பூன்

  • தண்ணீர் - தேவையான அளவு

  • எண்ணெய் - பொரிக்க

செய்முறை: 

பலாப்பழத்தை நன்றாகக் கழுவி அதன் விதைகளை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் அரிசி மாவு, ரவை, தேங்காய் துருவல், ஏலக்காய் தூள், உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலக்கவும். 

இப்போது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து, பாகு ஓரளவுக்கு கெட்டியான நிலைக்கு வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும். 

பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஒவ்வொரு குழியிலும் சிறிதளவு எண்ணெய் ஊற்றவும். இப்போது தயாரித்து வைத்துள்ள பணியாரக் கலவையில் பலாப்பழத் துண்டுகளை போட்டு நன்கு கலக்கி, ஒவ்வொரு குழியிலும் சிறிதளவு பணியாரக் கலவையை ஊற்றவும். 

பணியாரங்கள் பொன்னிறமாகும் வரை வேக வைத்து, திருப்பிவிட்டு எல்லா பக்கமும் வேக வைக்கவும். இறுதியில் தயாரான பணியாரங்களை எடுத்து சூடான சர்க்கரை பாகுடன் பரிமாறினால், சாப்பிட அவ்வளவு சுவையாக இருக்கும். 

இந்த பணியாரத்தில் பலாப்பழத்திற்கு பதிலாக வாழைப்பழம் மாம்பழம் போன்ற பிற பழங்களையும் பயன்படுத்தலாம். பணியாரக் கலவையில் நறுக்கிய முந்திரி பாதாம் உலர் திராட்சை சேர்த்தால் சுவை சூப்பராக இருக்கும். பணியாரங்களை தேங்காய் துருவல், சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் கலவையில் உருட்டி பரிமாறினால் சுவை வேற லெவலில் இருக்கும். 

இது எல்லா வயதினரும் விரும்பி உண்ணக்கூடிய ஒரு சிற்றுண்டி உணவாகும். எனவே என்றாவது நீங்கள் பலாப்பழம் வாங்கினால் இதை முயற்சித்து குடும்பத்தினருடன் சுவைத்து மகிழுங்கள். 

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT