உணவு / சமையல்

பாசிப்பயறு புட்டு

கல்கி

தேவையானவை:

பாசிப்பயறு -1 கப்

வெல்லத் தூள் – 3/4. கப்

ஏலக்காய்தூள் -1/4 ஸ்பூன்.

தேங்காய்த் துருவல் – ¼ கப்

முந்திரி – 5

செய்முறை:

பாசிப்பயறை நன்கு ஊற வைத்து, பின்னர் தண்ணீரை வடித்து மிக்ஸியில் கொஞ்சம் கரகரப்பாக சிறிது உப்பு சேர்த்து அரைத்து வைக்கவும். பிறகு இட்லி தட்டில் ஊற்றி இட்லியாக வேக விட்டு எடுக்கவும் ( இட்லி வேகும் நேரம்தான்).சிறிது சூடு இருக்கும்போதே நன்கு உதிர்த்து விட்டு நெய் கலந்து உதிர்க்க வே‌ண்டு‌ம். அத்துடன் தேங்காய் துருவல், ஏலக்காய்தூள். தேங்காய்த் துருவல், வெல்லத்தூள, வறுத்த முந்திரிப் பருப்பை சேர்த்து கலந்து விட்டால் சுவையான சத்தான புட்டு தயார். குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் மிகவும் நல்லது.

வாணி கணபதி, பள்ளிக்கரணை.

80 அடி உயர சிவபெருமான் சிலை எங்குள்ளது தெரியுமா?

ஆண்களை விட பெண்கள் ஏன் அதிகம் பேசுகிறார்கள் தெரியுமா?

ஒவ்வொன்றும் ஒரு ரகம்; தள்ளிப்போடுபவர்கள் மொத்தம் 5 ரகம்!

தமிழ் சினிமாவில் மாறாத விஷயங்கள் என எழுத்தாளர் சுஜாதா சொன்ன 20 சுவாரஸ்யமான விஷயங்கள்!

Male Heart Attack: ஆண்களுக்கு மாரடைப்பு வருவதற்கான 7 காரணங்கள்! 

SCROLL FOR NEXT