what will happen if you start reading a book everyday? 
Motivation

தினசரி புத்தகம் வாசிக்கத் தொடங்கினால் என்ன ஆகும் தெரியுமா? 

கிரி கணபதி

இன்றைய டெக்னாலஜி உலகில் நாம் நம் நேரத்தை பல விஷயங்களில் செலவிடுகிறோம். குடும்பம், வேலை, சமூக ஊடகங்கள், பொழுதுபோக்குகள் என நம் நேரம் சிதறடிக்கப்படுகிறது. இதனால் புத்தகம் படிக்க நேரம் ஒதுக்குவது கடினமாகிறது. ஆனால், தினசரி புத்தகம் வாசிக்க நேரம் ஒதுக்கினால் நமது வாழ்க்கையில் பல நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும். புத்தகங்கள் மூலம் நாம் புதிய அறிவை பெற்று, கற்பனை திறனை வளர்த்து, மன அழுத்தத்தைக் குறைக்கலாம். இது நம் வாழ்க்கை பற்றிய புதிய பார்வையை நமக்கு ஏற்படுத்தும். 

தினசரி புத்தகம் படிப்பதால் கிடைக்கும் நன்மைகள்: 

  • புத்தகங்கள் பல்வேறு துறைகளில் அறிவை வழங்குகின்றன. வரலாறு, அறிவியல், அரசியல், இலக்கியம் என பல துறைகளைப் பற்றி புத்தகங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். இது நமது அறிவு மற்றும் புரிதலை விரிவுபடுத்த உதவுகிறது. 

  • புத்தகங்கள் வாயிலாக நாம் பல கற்பனை உலகிற்கு பயணிக்கலாம். புத்தகத்தில் உள்ள கதாபாத்திரங்கள் சம்பவங்கள் மற்றும் இடங்கள் பற்றி சிந்திக்கும்போது நம் கற்பனை திறன் வளரும். 

  • நீங்கள் தினசரி புத்தகம் படித்து வந்தால், அது உங்கள் மன அழுத்தத்தை குறைக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒரு நல்ல புத்தகத்தில் முழுமையாக மூழ்கிவிட்டால் நம் பிரச்சனைகளை மறந்து சிறிது நேரம் ஓய்வெடுக்க முடியும். 

  • தொடர்ச்சியாக புத்தகம் படிப்பதால் உங்களின் Vocabulary மற்றும் Grammar மேம்படும். இது உங்களை மேலும் தெளிவாகவும், சுவாரசியமாகவும் எழுத, பேச உதவும். மேலும், புத்தகங்கள் புதிய யோசனைகளைத் தூண்டி உங்களது படைப்பாற்றலை அதிகரிக்கச் செய்யும். 

  • புத்தகங்கள் படிப்பதால் நம் மனநிலை மேம்படுகிறது. நேர்மறையான எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் ஏற்படுவதால், வாழ்க்கையில் எல்லா விஷயங்களையும் மகிழ்ச்சியாக நம்மால் பார்க்க முடியும். இத்துடன் நம்முடைய கம்யூனிகேஷன் ஸ்கில் நன்றாக வளரும். பிறரின் உணர்வுகளை சரியாகப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு நடந்து கொள்ள நாம் கற்றுக் கொள்ளலாம். இது மற்றவர்களுடன் நம் உறவை மேம்படுத்த உதவுகிறது. 

தினசரி புத்தகம் வாசிப்பதால் கிடைக்கும் நன்மைகளை சொல்லிக் கொண்டே போகலாம். எனவே, நீங்களும் உடனடியாக புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். தினசரி நேரம் காலம் அறியாமல் எப்போதும் ரீல்ஸ் உலகத்தில் மூழ்கிக் கிடக்காமல். கொஞ்சம் புத்தகங்களின் கற்பனை உலகத்திற்கு உங்களை அர்ப்பணியுங்கள். 

இது நிச்சயம் உங்களது வாழ்க்கையை சிறப்பாக மாற்றும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. இவ்வுலகில் சாதித்த பெரும்பாலான நபர்களை எடுத்துக் கொண்டால், அவர்கள் புத்தக வாசிப்பாளராகவே இருப்பார்கள். எனவே, நீங்களும் வாழ்க்கையில் சாதிக்க விரும்பினால், இன்றே புத்தகம் வாசிக்கத் தொடங்குங்கள். 

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT