மங்கையர் மலர்

வாவ் சொல்ல வைக்கும் வாழைத்தண்டு...

ஆர்.பிரசன்னா

* வாழைத்தண்டு சாறில் இரும்பு மற்றும் வைட்டமின் பி6 போன்றவை அதிக அளவில் உள்ளன.

* இது சிறந்த டையூரிடிக் பண்புகளை கொண்டிருப்பதால் உடலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றுகிறது.

* இது இன்சுலின் உற்பத்தியை மேம்படுத்துகிறது. எனவே, நீரிழிவு நோயாளிகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில், வைக்க தினமும் வாழைத்தண்டு ஜூஸ் குடிப்பது நல்லது.

* இது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதால், வாழைத்தண்டு சாற்றைத் தொடர்ந்து குடித்துவர ரத்தசோகை குணமாகும்.

* சிறுநீரக கற்கள் விரைவில் கரைய, குறைந்தது வாரத்திற்கு ஒரு முறையாவது வாழைத்தண்டு ஜூஸ் குடிக்க வேண்டும்.

* இது தேவையற்ற உடல் பருமனையும் குறைக்கும்.

* வாழைத்தண்டை பொரியல் செய்து சாப்பிட்டால் குடலில் சிக்கியுள்ள முடி, நஞ்சு போன்றவை வெளியேறிவிடும்.

* வாழைத்தண்டை சுட்டு, அதன் சாம்பலை தேங்காய் எண்ணெயில் கலந்து பூசிவர தீப்புண் காயங்கள் ஆறும்.

* வாழைத்தண்டை உலர்த்தி பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டு வர, காமாலை நோய் குணமாகும். மேலும், கல்லீரல் வலுவடையும்.

* வாழைத்தண்டு சாற்றுக்கு சிறுநீரை பெருக்கும் தன்மை உண்டு. எனவே, இதை நீர்ச் சுருக்கு, எரிச்சல் போன்றவை தீர அருந்தி வரலாம்.

* மாதவிடாய் கோளாறுகளால் ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கு நோய்க்கும் இது சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

* இதை அவ்வப்போது சேர்த்து வந்தால் சிறுநீரக கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது.

* வாழைத்தண்டு சாறு உடலில் அமிலத்தன்மை அளவை கட்டுப்படுத்த செய்யும். அமிலத்தின் சமநிலையை மீட்டெடுக்க உதவக்கூடும்.

* இதில் நார்ச்சத்தும் நிறைந்திருப்பதால் குடல் இயக்கங்கள் சீராகிறது. செரிமானம் மேம்படுகிறது. மலச்சிக்கலும் வராமல் தடுக்கிறது.

கண்களைக் கட்டிக்கொண்டு பெருமாளுக்கு கிரீடம் சாத்தும் கோயில் எது தெரியுமா?

ஊட்டச்சத்து நிறைந்த விதவித சப்பாத்திகளின் ஆரோக்கிய நன்மைகள்!

செல்வ செழிப்பு தரும் சில எளிய வாஸ்து குறிப்புகள்!

நேரம் எனும் நில்லாப் பயணி!

ஸ்வஸ்திக் வடிவ கிணறு பற்றி தெரியுமா உங்களுக்கு?

SCROLL FOR NEXT