மங்கையர் மலர்

வாசகியர் கவிதைகள்!

வாசகர்கள்

- ஹ்ரிஷிகேஷ்

.

ஒரு மழைத்துளியின் பயணம்!

மேகங்களின் செல்ல மோதல்களுக்கு

மெதுவாக மனமுவர்ந்து – உன்னுருவத்தை

மெலிதாக்கி மெல்ல கீழிறங்கினாய்!

நீ செய்த தியாகத்தை

நிராகரிக்க மனமின்றி

நிறங்கள் பல கொண்ட

நீளக்குடை நண்பனை துறந்தேன்!

ற்றுக்கொண்ட பயணம் – தடை

ஏதுமின்றி நிறைவேற

என் படைகளை உனக்காக

ஏவுகிறேன் காகிதக் கப்பல்களாக!

-------------

- மகாலட்சுமி சுப்பிரமணியன்

.

அமரர்

ருக்கும் போது அடாவடியாக

எல்லோராலும் வெறுக்கப்பட்டவர்

அமரர் ஆனதும்

அனைவருக்கும் கடவுள் ஆகி விடுகிறார்.

---------

பொம்மை வியாபாரி

ல கார்கள் வைத்திருந்தும்

நடந்தே செல்கிறான்

பொம்மை வியாபாரி.

---------

மழைத்துளி

முற்றத்து கைப்பிடி சரிவில்

தன்முறைக்காக காத்திருந்து

சறுக்கி மகிழ்கிறது

மழைத்துளி.

---------

கனவு கண்டவன்

திருமணத்திற்கு முன்

கல்யாணம் சொர்க்கத்தில்

நிச்சயிக்கப்படுவதாக

நம்பி கனவு கண்டவன்

தொடங்குகிறான் ஒரு மேட்ரிமோனியல் சைட்டை.

---------

அனுதாபத்துக்குரியவர்

லரின் ஆசையை நிராசையாக்க

பழியும் பாவமும்

சுமந்தவர்

தண்டனைக்குப் பிறகு

அனுதாபத்துக்குரியவராகி

விடுகிறார்.

'கெவ்ரா வாட்டரில்' இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?

அதிக நேரம் AC-யில் இருக்காதீங்க ப்ளீஸ்… மீறி இருந்தா? அச்சச்சோ! 

இந்த 7 சொற்றொடர்களைப் பயன்படுத்தினால் நீங்களும் ஒரு புத்திசாலி பெண்தான்!

Cape Rain Frog: வித்தியாசமான தென்னாப்பிரிக்க தவளை இனம்! 

விஜய் ஆண்டனியின் ‘ரோமியோ’ ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?

SCROLL FOR NEXT