செய்திகள்

ஜார்கண்டில் தடுப்பூசி போட்ட 24 மணி நேரத்தில் 3 மாதக் குழந்தை மரணம்!

கார்த்திகா வாசுதேவன்

ஜார்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில் உள்ள சமூக சுகாதார மையத்தில் தடுப்பூசி போடப்பட்ட 24 மணி நேரத்தில் மூன்று மாத குழந்தை உயிரிழந்துள்ளதாக சுகாதார அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

ராம்கர் சிவில் சர்ஜன் டாக்டர் பிரபாத் குமார், இறப்புக்கான காரணத்தை அறிய மருத்துவ வாரியம் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்த வழக்கின் விரிவான விசாரணைக்காக உள்ளுறுப்புகள் பாதுகாக்கப்படும், தடுப்பூசிக்குப் பிறகு குழந்தை இறந்த அரிய வழக்கை உலக சுகாதார அமைப்பின் (WHO) மாநிலக் குழு விசாரிக்கும் என்று குமார் கூறினார்.

அபிராஜ் குமார் என்ற குழந்தைக்கு, டிப்தீரியா, பெர்டுசிஸ், டெட்டனஸ் மற்றும் ஹெபடைடிஸ்-பி போன்ற கொடிய நோய்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் பென்டாவலன்ட் தடுப்பூசியை வியாழக்கிழமை பட்ராட்டுவில் உள்ள CHC யில் உள்ள துணை மருத்துவப் பணியாளர்கள் செலுத்தினர், மேலும் தடுப்பூசி செலுத்தப்பட்ட சில மணி நேரங்களிலேயே குழந்தையின் உடல்நிலை மோசமடைந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது, அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை அதிகாலை குழந்தை இறந்தது, என்றும் அந்த காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

குழந்தை இறந்ததற்கான காரணங்கள் எதுவாக இருந்தாலும் அது தடுப்பூசியை ஒட்டியதாகவே இருக்கும், ஆகவே எவ்வாறாயினும், அவரது பெற்றோர்களான பப்லு சாவோ மற்றும் லலிதா தேவி இருவரும், தங்கள் மகன் அலட்சியம் மற்றும் பாதுகாப்பற்ற தடுப்பூசி காரணமாகவே இறந்ததாகக் குற்றம் சாட்டி, அதற்குக் காரணமானவர்களைக் கைது செய்து அந்த வழக்கை கொலைக் குற்றச்சாட்டுகளின் கீழ் பதிவு செய்யுமாறு கோரினர்.

5 Cool experiments for young science lovers!

உண்டியலின்றி உயர்ந்து நிற்கும் பாலாஜி!

கவிதை - மாற்றம் வேண்டும்!

60 + வயது... அழகு நிலையம் செல்வது எதற்கு?

சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி சந்தோஷமாக வாழ்வோம்!

SCROLL FOR NEXT