கொரோனா
கொரோனா 
செய்திகள்

நாட்டு எல்லையைத் திறக்கும் சீனா: மீண்டும் கொரோனா பரவும் அபாயம்!

கல்கி டெஸ்க்

சீனாவில் புதுவகை கொரோனா தொற்று வேகமெடுத்துள்ள நிலையில், அந்நாடு கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தி, மீண்டும் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க உள்ளதாக அறிவித்துள்ளதால், மீண்டும் உலக நாடுகளில் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சீனா தனது நாட்டு எல்லைகளை வருகிற ஜனவரி 8-ம் தேதி முதல் திறக்கப் போவதாகவும், வௌிநாட்டு பயணிகளுக்கான விசாக்களை மீண்டும் வழங்க போவதாகவும் சீன அரசு நேற்று அறிவித்தது. சீனாவின் பொருளாதார சரிவை மீட்டெடுக்க இந்த முடிவை எடுத்துள்ளதாக சீன அதிபர் ஜீ ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

கடந்த 2020-ம் ஆண்டு சீனாவின் உகானில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளிலும் பரவியதில் ஏராளமானவர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து உலகம் முழுவதும் ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில் சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் உருமாறிய பிஎப் 7 என்ற கொரோனா அதிவேகமாகப் பரவி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

இந்நிலையில் மீண்டும் புத்தாண்டு முதல் தனது நாட்டின் எல்லைகளை திறக்கப் போவதாக சீன அரசு அறிவித்துள்ளதால் உலகம் முழுவதும் கொரோன பரவல் மீண்டும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bread Kulfi Recipe: பிரட் இருந்தால் போதும், வீட்டிலேயே செய்யலாம் சுவையான குல்பி!

இந்திய நேர மண்டலத்தால் சாதகமா? பாதகமா?

அதிக புரதம் நிறைந்த 10 சைவ உணவுகள்!

லகு நாரியல் என்றால் என்னவென்று தெரியுமா?

அனைத்திலும் வல்லுனராக இருப்பதற்கு எலான் மஸ்க் கூறும் தந்திரங்கள்! 

SCROLL FOR NEXT