செய்திகள்

கோவிட்-19 அப்டேட்ஸ்: இந்தியாவில் புதிதாக 3,016 பேருக்குத் தொற்று!

கார்த்திகா வாசுதேவன்

கோவிட் வழக்குகளின் நாடு தழுவிய எழுச்சிக்கு மத்தியில், இந்தியாவில் வியாழக்கிழமை புதிதாக 3,016 பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்திருப்பதாகப் பதிவாகியுள்ளது. சுமார் ஆறு மாதங்களில் இந்த திடீர் அதிகரிப்பானது மிக அதிகம் என கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. இதன் மூலம், செயலில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 13,509 ஆக அதிகரித்துள்ளது என்று வியாழக்கிழமை அன்று புதுப்பிக்கப்பட்ட மத்திய சுகாதார அமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி மொத்தம் 3,375 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சமீபத்திய 14 இறப்புகளுடன் நாட்டின் கோவிட் -19 இறப்பு எண்ணிக்கை 5,30,862 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமாக மகாராஷ்டிராவில் மூன்று, டெல்லியில் இருந்து இரண்டு மற்றும் ஹிமாச்சலப் பிரதேசத்தில் ஒன்று என்று பதிவாகிக் கொண்டிருந்த எண்ணிக்கை, கேரளாவால் நோய் குணமான 8 பேருடன் சமரசம் செய்யப்பட்டது.

காலை 8 மணிக்கு புதுப்பிக்கப்பட்ட அமைச்சக தரவுகளின்படி, தினசரி பாஸிட்டிவ் எண்ணிக்கை 2.73 சதவீதமாகவும், வாராந்திர பாஸிட்டிவ் எண்ணிக்கை 1.71 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் இன்று அவசர கோவிட் கூட்டம்...

தலைநகர் டெல்லியில் 300 கோவிட் 19 வழக்குகள் மற்றும் இரண்டு இறப்புகள் பதிவான அடுத்த நாள், டெல்லியின் நிலைமையை மறுஆய்வு செய்ய மாநில அரசு அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. சுகாதார அமைச்சர் சவுரப் பரத்வாஜ் இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார், இதில் மூத்த சுகாதாரத் துறை அதிகாரிகள், அரசு நடத்தும் மருத்துவமனைகளின் மருத்துவ இயக்குநர்கள் மற்றும் பிற பங்குதாரர்கள் கலந்து கொள்வார்கள் என்று அரசுத்துறை செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

மகாராஷ்டிராவில் தொடர்ந்து கோவிட் வழக்குகள் அதிகரித்து வருவதால், சோலாப்பூர், சாங்லி மாவட்டங்கள் கோவிட்-19 பாஸிட்டிவ் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளன.

மார்ச் மாதத்தில் சோலாப்பூர் மற்றும் சாங்லி மாவட்டங்கள் முறையே 20.05 சதவீதம் மற்றும் 17.47 சதவீத விகிதத்துடன் மகாராஷ்டிராவின் கோவிட் 19 பாஸிட்டிவ் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளன என்று மாநில சுகாதாரத் துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

100 சோதனைகளில் கண்டறியப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையை பாஸிட்டிவ் விகிதம் குறிக்கிறது என்று செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.

“நான்கு வாரங்களுக்கு முன்பு, மாநிலத்தில் 1.05 சதவீத கோவிட் 19 பாஸிட்டிவ் எண்ணிக்கை இருந்தது, ஆனால் மார்ச் 22 மற்றும் 28 க்கு இடையில், அது 6.15 சதவீதத்தைப் பதிவு செய்தது. சோலாப்பூர் (20.05 சதவீதம்“), சாங்லி (17.47 சதவீதம்), கோலாப்பூர் (15.35 சதவீதம்), புனே (12.33 சதவீதம்), நாசிக் 7.84 சதவீதம் மற்றும் அகமதுநகர் (7.56 சதவீதம்) ஆகியவை பாஸிட்டிவ் எண்ணிக்கை விகிதத்தில் அதிகரித்த மாவட்டங்களில் அடங்கும். என அரசுத் துறை செய்தி நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆழ்ந்த சுவாசம் தரும் 10 நன்மைகள் என்னென்ன தெரியுமா?

CSK Vs GT: தோனியை சிக்ஸே அடிக்க விடமாட்டோம் – GT யின் மாஸ்டர் ப்ளான்!

கேப்டனுக்கு பத்ம பூஷன் விருது... கண்கலங்கிய பிரேமலதா விஜயகாந்த்!

நவ அம்சங்களைக் கொண்ட அட்சய திருதியை!

ராயன் பட பாடல் வெளியீடு... எப்படி இருக்கு? செல்வராகவன் போட்ட நெகிழ்ச்சி பதிவு!

SCROLL FOR NEXT