செய்திகள்

‘மு.க.ஸ்டாலினை மீண்டும் முதல்வராக்குவோம்’ திண்டுக்கல் சீனிவாசன் தடுமாற்றப் பேச்சு!

கல்கி டெஸ்க்

த்தியாவசியப் பொருட்களான தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட பொருட்களின் விலைவாசி உயர்வைக் கண்டித்து அதிமுக சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில் இன்று திண்டுக்கல் நாகல் நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.

இந்த ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், “விலைவாசி என்பது நாம் யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நமது சகோதரிகள் காய்கறி மார்க்கெட்டுக்குப் போய் வந்த பிறகு வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொள்கிறார்கள். ‘நாங்க தெரியாம ஓட்டுப் போட்டுட்டோம். ஆயிரம் தரோம், இரண்டாயிரம் தரோம் என்று சொன்னாங்க ஏமாந்துட்டோம்’ என்கிறார்கள்.

இப்போது முதியோர் பென்ஷன் வாங்குகிறவர்களுக்கு அந்த உரிமைத் தொகை இல்லை என்கிறார்கள். கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கு இந்த பணம் இல்லை என்கிறார்கள். இரண்டரைக் கோடி பெண்களுக்கு இல்லை. ஒரு கோடி பெண்களுக்குத்தான் ஆயிரம் ரூபாய் பணம் கொடுப்போம் என்கிறார்கள். அடுத்துவரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் மு.க.ஸ்டாலினை டெபாசிட் இழக்க வைத்து மீண்டும் முதல்வராக்குவோம்” என்று, என்ன பேசுகிறோம் என்றே நினைவில்லாமல் மாற்றிப் பேசினார்.

அதைக் கேட்ட அதிமுக தொண்டர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே திண்டுக்கல் சீனிவாசனின் அருகில் இருந்தவர், ‘எடப்பாடி பழனிசாமி என்பதற்கு பதிலாக மு.க.ஸ்டாலின் என்று மாற்றிச் சொல்லிவிட்டீர்கள்’ என்று அவரிடம் கூற, உடனே சுதாரித்துக்கொண்ட திண்டுக்கல் சீனிவாசன், “அச்சச்சோ மாத்தி சொல்லிட்டேன். எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவோம்” என்று மறுபடியும் மாற்றிப் பேசினார். ஆனாலும், அதிமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியும், சலசலப்பும், வெறுப்புணர்வும் ஏற்பட்டது.

ப்ளீஸ் உப்பை குறைத்து சாப்பிடுங்களேன்…

ஒரு மொழி எப்படி அழிகிறது?

கிறிஸ்தவ மதத்தை பரப்ப முயற்சித்த தந்தை… கிரிக்கெட் வீராங்கனைக்கு வந்த சிக்கல்!

இதோ ஈஸியான தீபாவளி பட்சண டிப்ஸ் உங்களுக்காக..!

ஓ! இதனால தான் கிரிக்கெட் வீரர்கள் சுவிங்கம் மெல்கிறார்களா? 

SCROLL FOR NEXT