செய்திகள்

வீட்டில் கிளி வளர்க்க ஆசையா? நீலகிரி போகாதீங்க!

கல்கி

நீலகிரி மாவட்டத்தில் வீடுகளில் காட்டு கிளிகள் மற்றும் மைனா போன்ற பறவைகளை வளர்ப்பதற்கு அம்மாவட்ட வனத்துறை தடை விதித்துள்ளது.

-இதுகுறித்து நீலகிரி மாவட்ட வனத்துறை அறிவித்ததாவது;

நீலகிரி மாவட்டத்தில் வீடுகளில் காட்டு கிளிகள் மற்றும் மைனா போன்ற பறவைகளை வளர்ப்பதற்கு தடைவிதிக்கப் படுகிறது. ஏற்கனவே வீடுகளில் வளர்ப்பவர்களும் உடனடியாக அவற்றை வனப்பகுதிகளில் பறக்கவிட வேண்டும். இல்லாவிட்டால் இந்திய வனச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். 

-இவ்வாறு வனத்துறை நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நீலகிரி வனப்பகுதிகளில் காட்டுக் கிளிகள் மற்றும் மைனாக்களை பொறி வைத்து பிடித்து, விற்பனை செய்வது அதிகரிப்பதால் இந்நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக அம்மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஒலிபெருக்கி மூலம் எச்சரித்து வருகின்றனர்.

இந்திய வனச்சட்டத்தின் படி காடுகளில் சுற்றி திரியும் பறவைகளை வீடுகளில் வளர்ப்பது சட்ட விரோதம் என்பதால் இந்த நடவடிக்கையை எடுக்கப் பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். 

80 அடி உயர சிவபெருமான் சிலை எங்குள்ளது தெரியுமா?

ஆண்களை விட பெண்கள் ஏன் அதிகம் பேசுகிறார்கள் தெரியுமா?

ஒவ்வொன்றும் ஒரு ரகம்; தள்ளிப்போடுபவர்கள் மொத்தம் 5 ரகம்!

தமிழ் சினிமாவில் மாறாத விஷயங்கள் என எழுத்தாளர் சுஜாதா சொன்ன 20 சுவாரஸ்யமான விஷயங்கள்!

Male Heart Attack: ஆண்களுக்கு மாரடைப்பு வருவதற்கான 7 காரணங்கள்! 

SCROLL FOR NEXT