செய்திகள்

திருப்பதி கோயிலுக்கு இஸ்லாமியர் ரூ 1.02 கோடி நன்கொடை!

கல்கி டெஸ்க்

சென்னையைச் சேர்ந்த சுபினாபானு மற்றும் அப்துல் கனி ஆகிய இஸ்லாமியர் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ. 1.02 கோடி நன்கொடையாக வழங்கினர்.

 -இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தெரிவித்ததாவது;

 சென்னையைச் சேர்ந்த சுபினாபானு மற்றும் அப்துல் கனி ஆகிய இஸ்லாமியர் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ. 1.02 கோடி நன்கொடைகான காசோலையை ஏழுமலையான் கோயிலில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் செயலதிகாரி தர்மா ரெட்டியிடம் வழங்கினர்.

இதில், எஸ்.வி.அன்னப்பிரசாதம் அறக்கட்டளைக்கு ரூ.15 லட்சமும், திருமலையில் சமீபத்தில் நவீனப்படுத்தப்பட்ட  பத்மாவதி ஓய்வறையில் ரூ. 87 லட்சத்தில் புதிய மரச்சாமான்கள் மற்றும் சமையல் பாத்திரங்கள் வாங்குவதற்கும் தரப்பட்டது.

 -இவ்வாறு தெரிவிக்கப் பட்டது.

 இந்த இஸ்லாமிய பக்தர் ஏற்கனவே பலமுறை ஏழுமலையான் கோயிலுக்கு பல்வேறு நன்கொடைகளை வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஊட்டச்சத்து நிறைந்த விதவித சப்பாத்திகளின் ஆரோக்கிய நன்மைகள்!

செல்வ செழிப்பு தரும் சில எளிய வாஸ்து குறிப்புகள்!

நேரம் எனும் நில்லாப் பயணி!

ஸ்வஸ்திக் வடிவ கிணறு பற்றி தெரியுமா உங்களுக்கு?

சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!

SCROLL FOR NEXT