செய்திகள்

பொங்கல் பரிசு டோக்கன் இன்று முதல் வீடு வீடாக விநியோகம் ! தமிழக அரசு முடிவு!

கல்கி டெஸ்க்

தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை வரும் 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு அதனை முன்னிட்டு பொங்கலுக்கான பரிசு தொகுப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருக்கிறார். அதன்படி, அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக்கரும்பு ஒன்று மற்றும் ஆயிரம் ரூபாய் ஆகியவை வழங்கப்பட உள்ளன.பச்சரிசி, சர்க்கரை, கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்கான டோக்கன் இன்று முதல் தமிழக அரசால் வினியோகிக்கப்படுகிறது. பொங்கல் தொகுப்பு மக்களை சென்றடைய மாவட்ட ஆட்சியர்களே முழு பொறுப்பு என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

பொங்கல் தொகுப்பு பரிசு
  • இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வருகிற 9-ந் தேதியில் இருந்து வழங்கப்பட உள்ளன.

  • பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்.

  • மற்ற மாவட்டங்களில் அந்தந்த அமைச்சர்கள் தொடங்கி வைக்கிறார்கள் .

  • இந்த பொங்கல் தொகுப்பை பெறுவதற்கான டோக்கன் வீடு வீடாக சென்று வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

  • தமிழகம் முழுவதும் மொத்தம் 33000 ரேஷன் கடைகள் உள்ளது

  • அன்றைய தினமே தமிழகத்தின் அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆயிரம் ரூபாய் மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்.

  • கூட்டுறவு துறை உதவியுடன் இந்த டோக்கன் வழங்கும் பணி நடைபெறவுள்ளது.

  • டோக்கனில் பொங்கல் தொகுப்பை பெறும் நாள், நேரம் போன்ற தகவல்கள் இடம் பெற்றிருக்கும்.

  • இதனைக் காட்டி ரேஷன் கடைகளில் பொங்கல் குடும்ப ரேஷன் அட்டைதாரர்கள் பெற்றுக்கொள்ளலாம்.

  • டோக்கன்கள் இன்று முதல் 8-ம் தேதி வரை வழங்கப்பட உள்ளன.

  • 6-ம் தேதி விடுமுறை என்பதால் அன்று டோக்கன் வழங்கப்படாது.

  • ஒரு நாளுக்கு 240 டோக்கன்களை அலுவலர்கள் வீடு வீடாக வந்து வழங்குவார்கள்.

  • இன்று காலை 8.00 மணி முதல் இந்த டோக்கன் வழங்கும் பணி நடைபெறவுள்ளது.

மனச்சோர்வைப் போக்கும் மாமருந்து!

அட… இதுதான் Thuglife சிம்பு லுக்கா? நாளை வெளியாகும் சூப்பர் அப்டேட்!

ஹெல்தி ஹனி மிக்ஸ் தஹி சாலட்!

DC Vs RR: ப்ளே ஆஃப் செல்லுமா ராஜஸ்தான் அணி?

மாதாந்திர வருவானம் கிடைக்கும் அஞ்சல் அலுவலகத்தின் சூப்பர் திட்டம்!

SCROLL FOR NEXT