செய்திகள்

“காலேஜ் ஃபேர்வெல் போல இருக்கிறது" நடிகர் கார்த்தி நெகிழ்ச்சி!

தனுஜா ஜெயராமன்

மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டாம் பாகம் நாளை (ஏப்ரல் 28) வெளியாகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று ‘பொன்னியின் செல்வன்’ படக்குழு செய்தியாளர்களை சந்தித்தனர்.

மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ்இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் முதல் பாகத்திற்கு மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்த காரணத்தால் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பானது மக்களிடம் அதிகளவு மேலோங்கி காணப்படுகிறது. இந்த எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தும் வகையில் பொன்னியின் செல்வன் படக்குழு ஊர் ஊராக சென்று புரமோஷனில் ஈடுபட்டு வருகிறது.

இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் கார்த்தி, “காலேஜ் ஃபேர்வெல் போல இருக்கிறது. எத்தனையோ பேர் செய்ய நினைத்த கதாபாத்திரத்தில் நான் நடித்திருந்தது பெரும் மகிழ்ச்சி. ‘பொன்னியின் செல்வன்’ பயணம் முடியப்போகிறது. மற்ற மாநிலங்களில் செல்லும் போது தமிழ்நாட்டை பிரதிநிதித்துவப் படுத்தியது பெருமையாக இருந்தது. மணிரத்னத்தின் கனவுப் படம் இது. ராஜ ராஜ சோழனை காட்சிப்படுத்த அவர் எடுத்த மெனக்கெடலை நேரில் பாத்திருக்கிறேன். இப்படம் காலத்திற்கும் நிற்க வேண்டும் என்பதில் அவர் மிகவும் கவனமாக இருந்தார். இந்தப் படத்தை அவர் ரசித்து இயக்கினார். இந்தப் படத்தில் நான் ஒரு பகுதியாக இருந்தேன் என்பதில் மகிழ்ச்சி” என்றார்.

த்ரிஷா பேசுகையில், “ மணிரத்னத்தின் இயக்கத்தில் வேலை பார்த்தது பெருமையாக கருதுகிறேன். இந்தக் குழுவுடன் பயணிக்கும்போது ஒரு பெண்ணாக மிகவும் கம்ஃபர்டபிளாக உணர்ந்தேன். சென்னையில் தொடங்கி சென்னையில் புரமோஷனை முடிக்கிறோம். படத்தின் மீது பயங்கரமான எதிர்பார்ப்பு இருக்கிறது. எனக்கு பெரும்பாலும் பெஸ்ட் ஃப்ரண்ட்ஸ் இருந்ததில்லை. தற்போது அந்த குறை தீர்ந்துள்ளது. கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவியுடன் நடித்தது மிகவும் மகிழ்ச்சி” என்றார்.

80 அடி உயர சிவபெருமான் சிலை எங்குள்ளது தெரியுமா?

ஆண்களை விட பெண்கள் ஏன் அதிகம் பேசுகிறார்கள் தெரியுமா?

ஒவ்வொன்றும் ஒரு ரகம்; தள்ளிப்போடுபவர்கள் மொத்தம் 5 ரகம்!

தமிழ் சினிமாவில் மாறாத விஷயங்கள் என எழுத்தாளர் சுஜாதா சொன்ன 20 சுவாரஸ்யமான விஷயங்கள்!

Male Heart Attack: ஆண்களுக்கு மாரடைப்பு வருவதற்கான 7 காரணங்கள்! 

SCROLL FOR NEXT