வெடிகுண்டு
வெடிகுண்டு 
செய்திகள்

மீனவர்கள் வலையில் ராக்கெட் வெடிகுண்டு: போலீஸ் விசாரணை!

கல்கி டெஸ்க்

புதுக்கோட்டை மாவட்டம் ஆர்.புதுப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த இரு மீனவர்கள் 2 நாட்களுக்கு முன்பாக கடலில் மீன் பிடிக்க பைபர் படகில் சென்றுத் திரும்பிய பிறகு, மீன் வலையை கடற்கரையில் போட்டு விட்டு சென்றனர்.

நேற்று மதியம் அந்த மீனவர்கள் கடற்கரையில் தாங்கள் விட்டுச் சென்ற மீன் வலையை எடுக்கச் சென்றபோது, அதில் ராக்கெட் வெடிகுண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவித்தனர். அதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கடலோர காவல்படை போலீசார், அந்த ராக்கெட் வெடிகுண்டைக் கைப்பற்றி ஜாக்கிரதையாக அங்கிருந்து அப்புறப்படுத்தி,  மணல் மூட்டைகளுக்கு நடுவே வைத்துக் கொண்டு சென்றனர்.

இந்த ராக்கெட் வெடிகுண்டு மீனவர்கள் வலையில் கிடைக்கப் பெற்றது எப்படி என்பது குறித்து கடலோர காவல் படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒன்பது வாசல் கடந்து மூலவரை தரிசிக்கும் கோயில் எங்குள்ளது தெரியுமா?

சூரியகாந்தி விதையின் வியக்க வைக்கும் மருத்துவப் பலன்கள்!

Type 1 Diabetes: இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை! 

பலாக் கொட்டையின் வியக்க வைக்கும் அற்புதப் பலன்கள்!

ஸ்மார்ட்போனை ரீஸ்டார்ட் செய்வதால் இவ்வளவு நன்மைகளா? 

SCROLL FOR NEXT