செய்திகள்

ஆடி காரில் டீ விற்கும் அதிசய நபர்.

கிரி கணபதி

ந்தியாவில் தொழில் முனைவோர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இளைஞர்களும் நவீன உலகிற்கு ஏற்ற வகையில் புதிய சிந்தனைகளுடன் தொழில் செய்ய நினைப்பது நல்ல விஷயம்தான். அதற்காக அவர்கள் வாடிக்கையாளர்களை அணுகும் விதமும் வித்தியாசமாக இருக்கிறது. 

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களில் ஒரு இளைஞர் வேகமாக பிரபலமடையத் தொடங்கி இருக்கிறார். இதற்கு காரணம், மிகவும் விலை உயர்ந்த ஆடி காரில் டீ விற்பனை செய்து வருவதுதான். இது சார்ந்த காணொளி இணையத்தில் வைரலாகி பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இவரைப் பற்றிய முழு தகவல்கள் இதுவரை யாருக்கும் தெரியாமல் இருந்த நிலையில், தற்போது புதியதாக வெளிவந்த வீடியோவில் ஆடி காரில் டீ விற்பனை செய்யும் இளைஞர் பற்றிய புதிய தகவல்கள் தெரிய வந்துள்ளது. 

இந்த புதுவிதமான முயற்சியை கையில் எடுத்திருக்கும் இளைஞரின் பெயர் மன்னுசிங். அவரின் இந்த புதுமையான முயற்சியை On Drive Tea என அழைக்கிறார். இந்தியாவில் எங்கு சென்றாலும் தெருவுக்குத் தெரு பல டீ கடைகள் இருக்கின்றன. அப்படி இருக்கும் நிலையில் மிகவும் வித்தியாசமாக ஆடி காரில் விற்பனை செய்வது உண்மையிலேயே ஆகச் சிறந்த விளம்பர யுக்திதான்.

இவர் தனது ஆடி காரில் டீ விற்பது மட்டுமின்றி கூடவே வாடிக்கையாளர்களையும் தனது காரில் அமர வைத்து சொகுசான விஷயங்களையும் அனுபவிக்க அனுமதிக்கிறார். ஏனென்றால் நம்மில் பலர் ஆடி காரின் உள்ளே எப்படி இருக்கிறது என அமர்ந்துப் பார்த்திருக்க மாட்டோம். எனவே வாடிக்கையாளர்களை கவரும் இந்த புதுமையான முயற்சி அவருக்கு பலன் அளித்துள்ளது. இதில் அவர் டீ விற்பனை செய்யப் பயன்படுத்தும் ஆடி ஏ6 காரைப் பற்றி குறிப்பிட்டே ஆக வேண்டும். இது சொகுசு செடன் ரகத்தைச் சேர்ந்ததாகும். இந்திய சந்தையில் இதன் தற்போதைய மதிப்பு ரூபாய் 61 லட்ச ரூபாயாக இருக்கிறது. இந்த ரக காரின் டாப் வேரியண்டின் விலை 67 லட்ச ரூபாயாகும். 

ஆனால் மன்னு சிங் டீ விற்கப் பயன்படுத்தும் கார் ஏற்கனவே பயன்படுத்திய காராக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. தற்போது இந்திய சந்தையில் செகண்ட் ஹேண்ட் சொகுசுக் கார்களின் விலை ஓரளவுக்கு குறைவாகவே கிடைக்கிறது. இருப்பினும் இதுபோன்ற வித்தியாசமான முயற்சிகளை நாம் பாராட்டியாக வேண்டும். 

Audi போன்ற ஒரு பெரிய லக்சரி நிறுவனத்தின் காரினுள்ளே அமர்ந்து, டீ குடிக்கும் அரிய வாய்ப்பை மன்னு சிங் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறார். இந்த வாய்ப்பு நம்மில் எத்தனைப் பேருக்குக் கிடைக்கும்?

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT