ஸ்பெஷல்

10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை ஆய்வுமையம்!

கல்கி

தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வுமையம் அறிக்கையில் தெரிவித்ததாவது:

வளிமண்டல மேலடுக்குசுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று (அக்டோபர் 16) மிக பலத்த மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூா், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, சேலம், ஈரோடு , கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூா் ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணிநேரத்தில் தமிழகத்தில் இந்த 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

-இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

80 அடி உயர சிவபெருமான் சிலை எங்குள்ளது தெரியுமா?

ஆண்களை விட பெண்கள் ஏன் அதிகம் பேசுகிறார்கள் தெரியுமா?

ஒவ்வொன்றும் ஒரு ரகம்; தள்ளிப்போடுபவர்கள் மொத்தம் 5 ரகம்!

தமிழ் சினிமாவில் மாறாத விஷயங்கள் என எழுத்தாளர் சுஜாதா சொன்ன 20 சுவாரஸ்யமான விஷயங்கள்!

Male Heart Attack: ஆண்களுக்கு மாரடைப்பு வருவதற்கான 7 காரணங்கள்! 

SCROLL FOR NEXT