ஸ்பெஷல்

திமுக ஆக்சிஜனுடன் காங்கிரஸ் ஐசியூவில் இருக்கிறது; பிஜேபி மாநிலத் தலைவர் அண்ணாமலை அதிரடி!

கல்கி

திமுகவின் ஆக்சிஜன் உதவியுடன் காங்கிரஸ் கட்சி ஐசியூ-வில் இருப்பதாக தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

தமிழகத்தை பாஜகவால் ஒருபோதும் ஆட்சி செய்ய முடியாது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று நாடாளுமனற கூட்டத் தொடரில் பேசினார். மர்சனம் செய்திருந்தார். இந்நிலையில், ராகுல் காந்தியின் கருத்திற்கு பதிலளித்து பிஜேபி மாநிலத் தலவைர் அண்ணாமலை தன் டிவிட்டர் பதிவில் வெளியிட்டதாவது;

தமிழகத்தை பாஜகவால் ஆட்சி செய்ய முடியாது எனக் கூறியிருக்கிறார். தமிழகத்தை சில காலங்களுக்கு காங்கிரஸ் ஆட்சி செய்தது. அப்போது உங்கள் தாத்தா 1965-ம் ஆண்டு ஹிந்தி திணிப்புக்கு வழிவகை செய்தார். பின் 1986-ம் ஆண்டு உங்கள் தந்தையும் அதை செய்தார். பின், காமராஜரை அவமதித்தீர்கள். உங்கள் பாட்டி 1974-ம் ஆண்டு கச்சத்தீவை வெளிநாட்டுக்கு கொடுத்தார். மேலும் இலங்கை தமிழர்களுக்கு நடந்த பிரச்னைகளுக்கு காங்கிரஸ் கட்சியே பொறுப்பு. இவற்றின் விளைவாக, தற்போது திமுகவின் ஆக்சிஜன் உதவியுடன் ஐ.சி.யூ.வில் இருக்கின்றீர்கள்.

-இவ்வாறு அண்ணாமலை தன் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

80 அடி உயர சிவபெருமான் சிலை எங்குள்ளது தெரியுமா?

ஆண்களை விட பெண்கள் ஏன் அதிகம் பேசுகிறார்கள் தெரியுமா?

ஒவ்வொன்றும் ஒரு ரகம்; தள்ளிப்போடுபவர்கள் மொத்தம் 5 ரகம்!

தமிழ் சினிமாவில் மாறாத விஷயங்கள் என எழுத்தாளர் சுஜாதா சொன்ன 20 சுவாரஸ்யமான விஷயங்கள்!

Male Heart Attack: ஆண்களுக்கு மாரடைப்பு வருவதற்கான 7 காரணங்கள்! 

SCROLL FOR NEXT