ஸ்பெஷல்

பஃபெட்டுடன் பஃபே சாப்பிட ரூ. 150 கோடியா?!

கல்கி

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான வாரன் பஃபெட்டுடன் இரவு பஃபே டின்னர் அருந்துவதற்கான வாய்ப்பு 150 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. அமெரிக்காவில் 20 லட்சம் ரூபாய்க்கு தொடங்கிய இந்த ஏலம், தாறுமாறாக எகிறி இந்திய மதிப்பில் ரூ. 150 கோடியில்  முடிவடைந்தது

இதுகுறித்து இந்த ஏலத்தை நடத்திய இ.பே நிறுவனம் குறிப்பிட்டதாவது;

உலகின் நம்பர்-ஒன் முதலீட்டாளராகக் கருதப்படும் வாரன் பஃபெட்டுடன் இரவு உணவு அருந்துவதற்கான ஏலம் அமெரிக்காவில் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.இந்த வகையில் இந்த ஆண்டும் நடத்தப் பட்டது. இதில் துவக்கத்தில் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆரம்பித்த ஏலத்தொகை, இறுதியாக ரூ. 150 கோடிக்கு முடிவடைந்தது. இவ்வாறு ஏலத்தில் திரட்டப்படும் தொகை, சமூக சேவை பணிகளுக்காக பல  தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கப்படுகிறது. எனினும், வாரன் பஃபெட்டுடன் டின்னர் அருந்துவதற்காக ஏலம் நடத்தப் படுவது இந்தாண்டுடன் முடிவடைகிறது. 

-இவ்வாறு இ.பே நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்நிறுவனம் நடத்திய இந்த ஏலத்தில் வெற்றி பெற்றவர் யார் என்பது குறித்த விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை.

உடலை இலகுவாக வைக்கும் ஆரோக்கிய உணவுகள்!

காய்கறித் துண்டு, பழத் துண்டு தெரியும்; உளவியல் சொல்லும் மெல்லிய துண்டம் தெரியுமா?

பகுஜன் சமாஜ் கட்சி: மாயாவதியின் அரசியல் வாரிசு?!

Neuroplasticity-இன் அற்புதமான செயல்பாடுகள் பற்றி தெரியுமா?

நிமிடத்துக்கு நிமிடம் மாறி மாறி காட்சி தரும் தமிழகத்தின் மாயாஜால பாலைவனம்!

SCROLL FOR NEXT