ஸ்பெஷல்

இந்திய விமானப் படையின் முதல் பெண் போர் விமானி: அபிலாஷா பராக்!

கல்கி

இந்திய விமானப் படையில் இணைந்த  முதல் பெண் போர் விமானி என்ற பெருமை பெற்றுள்ளார் அபிலாஷா பராக்.

இந்திய ராணுவத்தின்  விமானப் படையில் இதுவரை போர் விமானிகளாக பெண்கள் யாரும் பணிபுரியாத நிலையில், முதன்முறையாக பெண் போர் விமானியாக அபிலாஷா பராக் நேற்று பொறுப்பேற்றார். மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள போர் விமானிகள் பயிற்சி பள்ளியில் பயிற்சி முடித்த அபிலாஷா, நேற்று பொறுப்பேற்றார்.  அபிலாஷாவுக்கு  பயிற்சி நிறைவு பதக்கத்தை ராணுவ வான்பாதுகாப்பு படை தலைமை இயக்குனர் லெப்டினன்ட் ஜெனரல் .கே.சூரி அணிவித்தார்

அபிலாஷா பராக், அரியானா மாநிலம், பஞ்ச்குலாவை சேர்ந்தவர். இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ராணுவ வான்பாதுகாப்பு படையில் சேர்ந்தார். இவரது தந்தை ஓம் சிங், இந்திய ராணுவத்தில் காஷ்மீரில் கர்னலாக பதவி வகித்து ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்களை விட பெண்கள் ஏன் அதிகம் பேசுகிறார்கள் தெரியுமா?

ஒவ்வொன்றும் ஒரு ரகம்; தள்ளிப்போடுபவர்கள் மொத்தம் 5 ரகம்!

தமிழ் சினிமாவில் மாறாத விஷயங்கள் என எழுத்தாளர் சுஜாதா சொன்ன 20 சுவாரஸ்யமான விஷயங்கள்!

Male Heart Attack: ஆண்களுக்கு மாரடைப்பு வருவதற்கான 7 காரணங்கள்! 

சிரஞ்சீவியாக உலகில் வாழும் ஏழு பேர் யார் தெரியுமா?

SCROLL FOR NEXT