ஸ்பெஷல்

தந்தை மகற்காற்றும் உதவி!

கல்கி

-ராகவ் குமார்.

பிரபல நடிகர் விஜயகுமாரின் மகனாக இருந்தாலும் அருண் விஜய் பல போராட்டங்களை சந்தித்துதான் திரைதுறையில் வெற்றிபெற்றுள்ளார்.

அதிலும் போலீஸ் கதைகள் என்றால் சொல்லவே வேண்டாம். புகுந்து விளையாடுவார். குற்றம் 23 உட்பட அருண் விஜய் நடித்த சில படங்கள் இதற்க்கு உதாரணம்.இவரது திறமையை உணர்ந்த தந்தை விஜயகுமார், மகன் அருண் விஜய்க்காக சினம் என்ற படம் தயாரித்துள்ளார்.

விஜயகுமார் தயாரிப்பில் அருண் விஜய் நடிக்கும் இப்படத்தை இயக்கி உள்ளவர் ஜி.என்.குமாரவேலன் இயக்கி உள்ளார். இவரது தந்தை ஜி.என். ரங்கராஜன் மீண்டும் கோகிலா, கடல் மீன்கள் போன்ற பல படங்களை இயக்கி பழம்பெறும் இயக்குனர்.

"ஒரு காவல் துறை அதிகாரிதான் அருண் விஜய் கேரக்டர்க்கு இன்ஸ்பிரேஷன். சமுதாயத்தின் மீது அன்பு கொண்ட ஒருவன் அநீதிக்காக கொள்ளும் சினம்தான் இப்படம்'' என்கிறார் டைரக்டர்.

இப்படத்தின் இசை வெளியிட்டு விழாவில் அருண் விஜய் தனது தந்தை, தாயார், தங்கை, மாப்பிள்ளை டைரக்டர்  ஹரி என குடும்பத்துடன் கலந்து கொண்டார். அருண் விஜய் குடும்பத்தினர் அனைவரையும் ஒரே மேடையில் பார்ப்பது அரிது என்கிறார்கள் ரசிகர்கள்.

இப்படத்தை தந்தை தனது மகனுக்காக தயாரித்தார் என்று சொல்வதை விட அப்பா மகனுக்கு தரும் அன்பு பரிசு என்று சொல்லலாம். ஒருவரின் வெற்றியில் குடும்பத்தின் பங்களிப்பு மிக முக்கியமானது என்பார்கள்.

அருண் விஜய்யின் சினத்தின் வெற்றியிலும் இவரது குடும்பத்தினரின் பிரதிபலிப்பு இருக்கு என்பது நிச்சயம்.

உங்கள் சருமத்திற்கு ஏற்ற சரியான சீரம் எப்படி தேர்வு செய்வது தெரியுமா? 

துப்புரவுப் பணியாளர்களுக்கு துணை நிற்போம்!

அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாக்க செய்யக்கூடிய 9 எளிய விஷயங்கள்!

கைவசம் வசம்பு... இனி நோ வம்பு!

பாகுபலி பிரபாஸுக்கு திருமணமா? இன்ஸ்டா ஸ்டோரி வைரல்!

SCROLL FOR NEXT