ஸ்பெஷல்

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: இந்திய வீராங்கனை அன்ஷு மாலிக் வெள்ளி பதக்கம்!

கல்கி

நார்வே நாட்டின் ஓஸ்லோவில் நடந்த மகளிருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை அன்ஷு மாலிக் (வயது 19) வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனையான அன்ஷூ மாலிக், அதில் வெள்ளிப்பதக்கமும் வென்று வரலாறு படைத்துள்ளார்.

57 கிலோவுக்கான இந்த இறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை ஹெலன் லூசி மொரோலியை வீழ்த்தி அன்ஷூ மாலிக் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதே போட்டியில் 59 கிலோவுக்கான பிரிவில் மற்றொரு இந்திய வீராங்கனை சரிதா மோர் வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

இதற்கு முன் கடந்த 2010-ம் ஆண்டு இந்திய வீரர் சுஷில் குமார் மட்டுமே இந்தியா சார்பில் உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் சுற்றில் அன்ஷு மாலிக்கும் அதற்கடுத்த சுற்இல் அமெரிக்க வீராங்கனையும் முன்னிலை வகித்தனர். அதையடுத்து அமெரிக்க வீரங்கனை ஹெலனின் வலிமையான பிடியில் சிக்கி வலியில் அன்ஷூ துடிக்க, உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் தொடர்ந்து விளையாடி வெள்ளிப் பதக்கம் வென்றது ம்க சிறப்பானதாகும்.

இதற்கு முன் கடந்த 2010-ம் ஆண்டு இந்திய வீரர் சுஷில் குமார் மட்டும் இந்தியா சார்பில் உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

80 அடி உயர சிவபெருமான் சிலை எங்குள்ளது தெரியுமா?

ஆண்களை விட பெண்கள் ஏன் அதிகம் பேசுகிறார்கள் தெரியுமா?

ஒவ்வொன்றும் ஒரு ரகம்; தள்ளிப்போடுபவர்கள் மொத்தம் 5 ரகம்!

தமிழ் சினிமாவில் மாறாத விஷயங்கள் என எழுத்தாளர் சுஜாதா சொன்ன 20 சுவாரஸ்யமான விஷயங்கள்!

Male Heart Attack: ஆண்களுக்கு மாரடைப்பு வருவதற்கான 7 காரணங்கள்! 

SCROLL FOR NEXT