ஸ்பெஷல்

நெல் கொள்முதலுக்கு ஆன்லைன் பதிவு: தமிழக அரசு அறிவிப்பை எதிர்த்து விவசாயிகள் போராட்டம்!

கல்கி

தமிழக விவசாயிகள் ஆன்லைனில் பதிவு செய்தால் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படும் என்ற தமிழக அரசின் புதிய உத்தரவை எதிர்த்து இன்று தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பாக, விவசாயிகள் கழுத்தில் நெல் மூட்டைகளை அணிந்தும், தரையில் படுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர் .இப்போராட்டம் குறித்து விவசாயிகள் கூறீயதாவது:

குறுவை அறுவடை தொடங்கி 10 நாட்களாக ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன.இவற்றை ஆன்லைனில் பதிவு செய்தால் மட்டுமே கொள்முதல் செய்யப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை விவசாயிகளுக்கு மேலும் சிக்கலை உருவாக்கும். எனவே அரசு இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

-இவ்வாறு அந்த விவசாயிகள் கூறினர்.

80 அடி உயர சிவபெருமான் சிலை எங்குள்ளது தெரியுமா?

ஆண்களை விட பெண்கள் ஏன் அதிகம் பேசுகிறார்கள் தெரியுமா?

ஒவ்வொன்றும் ஒரு ரகம்; தள்ளிப்போடுபவர்கள் மொத்தம் 5 ரகம்!

தமிழ் சினிமாவில் மாறாத விஷயங்கள் என எழுத்தாளர் சுஜாதா சொன்ன 20 சுவாரஸ்யமான விஷயங்கள்!

Male Heart Attack: ஆண்களுக்கு மாரடைப்பு வருவதற்கான 7 காரணங்கள்! 

SCROLL FOR NEXT