விளையாட்டு

CSK அணியின் புதிய கேப்டன் ரவீந்திர ஜடேஜா: தோனி ரசிகர்களுக்கு அதிர்ச்சி!

கல்கி

ஐபிஎல் 15-வது சீசன் கிரிக்கெட் போட்டிகள் தொடங்க இன்னும் மூன்று நாட்களே உள்ள சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகுவதாக அறிவித்துள்ளார். இதையடுத்து சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜா தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கேப்டனாக அல்லாமல் சாதாரண வீரராக இந்த ஐபிஎல் போட்டியில் விளையாடுவதாக மகேந்திர சிங் தோனி அறிவித்துள்ளது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றைத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் போட்டிகள் ஆரம்பித்ததிலிருந்து முதல் தொடரிலிருந்து சிஎஸ்கே  அணியின் கேப்டனாக செயல்பட்டு வருபவர் தோனி. இதுவே அவரது இறுதி ஐபிஎல் போட்டி என்றும் சொல்லப்படும் நிலையில் தனது கேப்டன் பதவியை ரவீந்திர ஜடேஜாவுக்காக தோனி விட்டுக்கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணியின் தொடக்கத்திலிருந்து இப்போது வரை மாற்றப்படாத ஒரே கேப்டன்  எம்.எஸ் தோனி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. தோனி தன் கேப்டன் பதவியைத் துறப்பதாக வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து சமூக வலைதளங்களில் #எம்.எஸ் தோனி, #சிஎஸ்கே,  #சென்னை சூப்பர் கிங்ஸ் என ரசிகர்கள் இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

மார்ச் 26-ம் தேதி தொடங்கப்படும் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா அணியை சந்திக்கிறது சிஎஸ்கே அணி என்பது குறிப்பிடத்தக்கது. 2008-ம் ஆண்டு தொடங்கி தற்போதுவரை  நான்கு IPL வெற்றிக் கோப்பைகளை தட்டிச் சென்றுள்ளது நடப்பு சேம்பியனான சிஎஸ்கே அணி.

இயற்கையை ரசிக்க என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

இணையத்தில் உள்ள AI Web Browsers என்னென்ன தெரியுமா? அவற்றின் பலன்களைப் பார்ப்போமா?

மின்னணு வாக்குப்பதிவு vs வாக்குச்சீட்டு: தேர்தல் ஆணையம் சொல்வது என்ன?

ஆஞ்சநேயரின் காலடியில் ஸ்ரீ சனிபகவான் உள்ள அபூர்வமான ஸ்தலம்!

கவிதை - ஞானத் திருட்டு!

SCROLL FOR NEXT