வீராங்கனை கலைவாணி
வீராங்கனை கலைவாணி 
விளையாட்டு

தேசிய மகளிர் குத்துச்சண்டை போட்டி : தமிழக வீராங்கனைக்கு வெள்ளி!

கல்கி டெஸ்க்

போபாலில் நடைபெற்ற 6வது தேசிய மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீராங்கனை கலைவாணி வெள்ளிப்பதக்கம் வென்றார். 

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் 6வது தேசிய மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. 12வகையான எடை பிரிவில் இந்தியா முழுவதும் இருந்து 302 வீராங்கனைகள் இந்த தொடரில் பங்கேற்றுள்ளனர்.

இதில், 48கிலோ எடை பிரிவில் தமிழக வீராங்கனை கலைவாணி, 2019 உலக சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளி வென்றவரும், இந்தியன் ரயில்வே அணியை சேர்ந்தவருமான மஞ்சு ராணியை எதிர்கொண்டார். 3 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியின் முடிவில் 0-5 என்ற கணக்கில் தமிழக வீராங்கனை கலைவாணி வெள்ளிப்பதக்கம் வென்றார். 

ஏற்கனவே, 2 சர்வதேச போட்டிகளில் ஒரு தங்கம், ஒரு வெண்கலம் வென்றுள்ள தமிழக வீராங்கனை கலைவாணி, வளர்ந்து வரும் குத்துச்சண்டை வீராங்கனைகளில் முக்கிய இடம் பெற்றுள்ளார்.

தினம் ஒரு புதிர்: உங்கள் பார்வை கூர்மையாக உள்ளதா? முடிந்தால் மறைந்துள்ள எழுத்தை கண்டுபிடியுங்கள்!

தீப திரிகளின் வகைகளும்; பயன்களும்!

அருகி வரும் அரியக் கலை தெருக்கூத்து!

லென்டில்ஸ் அன்ட் லெக்யூம்ஸ் தரும் ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?

இயற்கையை ரசிக்க என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

SCROLL FOR NEXT