விளையாட்டு

8 ஆயிரம் மீட்டருக்கு மேல் 5 சிகரங்கள்; எட்டிப் பிடித்த முதல் இந்தியப்பெண்!

கல்கி

மகாராஷ்டிரா மாநிலத்தில் சதாரா பகுதியைச் சேர்ந்த  பிரியங்கா மோஹிதே என்ற இளம்பெண் இமயமலையில் 8 ஆயிரம் மீட்டருக்கு உயரமான 5 சிகரங்களை எட்டிப் பிடித்த முதல் இந்தியப் பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

 இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:

எனக்கு  சிறுவயதிலிருந்தே மலை ஏறுவதில் விருப்பம் அதிகம். அந்த வகையில் இப்போது உலகின் 3-வது உயரமான சிகரமான காஞ்சன்ஜங்கா சிகரத்தை (8,586 மீ)  சென்றடைந்தேன்.

இதையடுத்து 8,000 மீட்டருக்கு மேலுள்ள 5 சிகரங்களை அடைந்த முதல் இந்தியப்பெண் என்ற சாதனை கிட்டியுள்ளது. இதற்கு முன்னதாக 2013-ல் எவரெஸ்ட் சிகரம் (8,849 மீ), 2018-ம் ஆண்டு லோட்சே மலை (8,516 மீ), மவுண்ட் மகாலு (8,485 மீ) மற்றும் ஏப்ரல் 2021-ல் அன்னபூர்ணா மலை (8,091 மீ) ஆகியவற்றை ஏறியுள்ளேன்.

-இவ்வாறு  பிரியங்கா தெரிவித்தார். 

இவரது இச்சாதனைகளுக்காக 2020 –ல் டென்சிங் நார்கே சாகச விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அரங்கன் விரும்பும் விருப்பன் திருநாள்!

வாழ்வை அழகாக்கும் அர்த்தமுள்ள சின்ன (பெரிய) விஷயங்கள்!

மூளை ஆரோக்கியத்திற்குத் தேவையான முதன்மை உணவு!

குறமகள் வள்ளி குகை எங்கு இருக்கு தெரியுமா?

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வந்த வரலாறு தெரியுமா?

SCROLL FOR NEXT