Medicinal properties of the pungai tree. 
ஆரோக்கியம்

புங்கை மரத்தின் மருத்துவ குணங்கள்... இத்தனை நாள் இது தெரியாம போச்சே!

கிரி கணபதி

இயற்கை என்பது பல்வேறு விதமான நோய்களைத் தீர்ப்பதற்கான தாவரங்கள் மற்றும் மரங்களைக் கொண்டிருக்கிறது. இதில் புங்கை மரம் ஒன்றும் விதிவிலக்கல்ல. இதன் ஏராளமான பயன்பாடுகளால் ஆயுர்வேதம் மற்றும் சித்தா போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகளில் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் விதைகள், இலைகள், பூக்கள் மற்றும் பட்டைகள் என அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்ததாகும். இப்பதிவில் புங்கை மரத்தின் நம்ப முடியாத ஆரோக்கிய நன்மைகளை பற்றி தெரிந்து கொள்வோம். 

அழற்சி எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணி: புங்கை மரம் சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணிப் பண்புகளைக் கொண்டுள்ளது. மரத்தின் விதைகளில் இருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணையில் பொங்கமோல் மற்றும் கரஞ்சின் போன்ற கலவைகள் உள்ளன. இவை குறிப்பிடத்தக்க அழற்சி எதிர்ப்பு விளைவுகளை வெளிப்படுத்துகின்றன. இது மூட்டு வலி, வாத நோய் போன்றவற்றை சரி செய்ய உதவுகிறது. புங்கை மரத்தின் பூவையும் இத்தகைய நோய்களுக்குப் பயன்படுத்தலாம்.  

சரும பராமரிப்பு: புங்கை எண்ணெயில் பிளாவனாய்டுகள், டானின்கள் மற்றும் பிற உயிர் சக்தி சேர்மங்கள் நிறைந்துள்ளது. இவை ஆக்சிஜனேற்றம் மற்றும் ஆன்ட்டி மைக்ரோபியல் விளைவுகளை வழங்குகின்றன. இந்த எண்ணையின் மென்மையாக்கும் பண்புகள் ஒரு சிறந்த மாய்ஸ்ரைசராக செயல்படுகிறது. இது உலர்ந்த மற்றும் சேதமடைந்த சருமத்தை சரி செய்ய உதவுகிறது. கூடுதலாக முகத்தில் இருக்கும் வடுக்கள், தழும்புகள் மற்றும் தோல் நிற மாற்றங்களைக் குறைக்க உதவி, பிரகாசமான தோற்றத்தை அளிக்கிறது. 

காயத்தை குணப்படுத்துதல்: புங்கை மர விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணையை காயத்தின் மீது தடவும்போது அது விரைவாக குணமாகிறது. இதில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், காயங்களில் தொற்று நோய் ஏற்படுவதைத் தடுக்க உதவுகிறது. கொலாஜன் உற்பத்தியைத் தூண்டி திசுவை விரைவாக சரி செய்வதற்கும், வடுக்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதற்கும் புங்கை எண்ணெய் பயன்படுகிறது. 

நீரிழிவு நோயைக் குறைக்கும்: புங்கை மர இலையின் சாறு ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைக் குறைக்கும் திறன் கொண்டவை. இது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த மருந்தாகப் பார்க்கப்படுகிறது. மேலும் இதில் நிறைந்துள்ள ஆன்ட்டி மைக்ரோபியல் பண்புகள் நோய்த் தொற்றுகளுக்கு எதிராக சிகிச்சை அளிக்க பாரம்பரிய மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றன. 

இப்படி, புங்கை மரத்தின் எல்லா பாகங்களும் தனித்துவமான நன்மைகளை வழங்குகின்றன. மேலும் இந்த மரத்தின் நன்மைகளால், நமது ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு கிடைத்த இயற்கை வளமாகப் பார்க்கப்படுகிறது. எனவே அதிக ஆக்ஸிஜனை வெளியிடும் புங்கை மரத்தை ஒவ்வொருவரும் தங்களது வீட்டில் வளர்த்து, அதன் நன்மைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள். 

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT