D. சீனீவாசன்

சிறுகதைகள் எழுதுவது என்பது என்னுடைய பத்து வயதில் தோன்றிய ஆர்வம். ஆனால் படிக்கும் வயதில் கதை எழுதுவது என்பது என்னுடைய விருப்பமாக இருந்தாலும், அந்த காலத்தில் பெற்றோர்கள் அனுமதி அளிக்கமாட்டார்கள். எங்கள் வீட்டிலும் அதே நிகழ்வு தான். முதலில் உன் கதையை நல்லபடியாக முடித்து, வாழ்க்கையில் முன்னேறிய பின்னர், அடுத்தவர் கதையை எழுது என்றனர். காத்திருந்தேன் தந்தையின் சொல்லில் மதிப்பு வைத்து, அந்த நாளுக்காக. வாழ்க்கையில் பல சோதனைகள், தோல்விகள், தடங்கல்கள், சறுக்கல்கள் என்று கடந்து நான் என் வாழ்க்கையில் முன்னேற மேலும் 50 ஆண்டு காலம் பிடித்தது. 62 வயதில் எழுத ஆரம்பித்தேன். இது வரையிலும் சுமார் 86 கதைகள் எழுதி விட்டேன். தொடர்ந்து எழுதி வருகிறேன் பல இணையதளங்களில் இன்று வரையிலும். தொடர்ந்து எழுத இறைவன் அருளை வேண்டுகிறேன்.
Connect:
D. சீனீவாசன்
logo
Kalki Online
kalkionline.com