பணக்காரர் ஆகணும்னு நினைச்சா, இந்த 5 நிதி தவறுகளை மட்டும் செய்யாதீங்க!

A man sits anxiously with his head in his hands.
Financial mistakeImg credit: freepik
Published on

பணக்காரராக மாற வேண்டும் என்பது எல்லோரின் கனவு. அதற்கு அதிக வருமானம் மட்டும் போதாது. அந்தப் பணத்தை எப்படிச் செலவு செய்ய வேண்டும்; எப்படிச் சேமிக்க வேண்டும்; எப்படி முதலீடு செய்ய வேண்டும் என்ற நிதிப் புரிதல் அவசியம். பணக்காரராக வேண்டும் என இலக்கு வைத்திருப்பவர்கள், கண்டிப்பாக சில நிதி தவறுகளைத் தவிர்ப்பது அவசியம். அப்படிப்பட்ட ஐந்து முக்கிய நிதித் தவறுகளை இந்தப் பதிவில் காணலாம்.

1. அவசர கால நிதியை அலட்சியப்படுத்துதல்:

மருத்துவச் செலவு, வேலை இழப்பு அல்லது வேறு எதிர்பாராத சூழ்நிலைகள் என ஆபத்து திடீரென வரும். இது உங்கள் நிதி நிலையைத் தலைகீழாக மாற்றலாம். அவசர கால நிதி (Emergency Fund) இல்லாதவர்கள், இதுபோன்ற சூழ்நிலைகளில் கடன் வாங்கி, மேலும் நிதி நெருக்கடியில் சிக்க நேரிடும். உங்கள் மாதச் செலவுகளுக்கு மூன்று முதல் ஆறு மாதங்களுக்குத் தேவையான தொகையை, எளிதில் எடுக்கக்கூடிய ஒரு சேமிப்புக் கணக்கில் வைத்திருப்பது புத்திசாலித்தனம். இது உங்கள் நிதி பாதுகாப்பை உறுதி செய்யும்.

2. பணவீக்கத்தை (Inflation) எதிர்த்து முதலீடு செய்யாமல் இருப்பது:

பணவீக்கம் என்பது இன்று ரூ.100-க்கு வாங்கிய பொருளின் விலை அடுத்த ஆண்டு ரூ.105-ஆக மாறுவதைக் குறிக்கிறது. உங்கள் சேமிப்பை வங்கிக் கணக்கிலேயே வைத்திருந்தால், அதன் மதிப்பு பணவீக்கத்தால் குறைந்துவிடும். உதாரணமாக, வங்கியில் 5% வட்டி கிடைத்தாலும், பணவீக்கம் 7% இருந்தால், உங்கள் பணத்தின் வாங்கும் சக்தி குறைந்துவிடும். எனவே, பணவீக்கத்தை விட அதிக வருமானம் தரும் மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட் போன்ற முதலீடுகளில் கவனம் செலுத்துவது உங்கள் பணத்தின் மதிப்பை அதிகரிக்கும்.

3. ஒரே முதலீட்டில் பணத்தைக் குவித்தல்:

ஒருவர் தனது அனைத்து பணத்தையும் ஒரே ஒரு நிறுவனத்தின் பங்கில் அல்லது ஒரே ஒரு முதலீட்டுத் திட்டத்தில் போடுவது மிகவும் ஆபத்தானது. அந்த முதலீட்டின் மதிப்பு சரிந்தால், உங்கள் மொத்தப் பணமும் வீணாகலாம்.

இதையும் படியுங்கள்:
ஒருவர் உண்மையான பணக்காரர் என்பதை உணர்த்தும் நுட்பமான அறிகுறிகள்!
A man sits anxiously with his head in his hands.

எனவே, முதலீட்டைப் பலதரப்பட்ட திட்டங்களில் பிரித்து முதலீடு செய்வது அவசியம். பங்குகள், கடன் பத்திரங்கள், தங்கம், ரியல் எஸ்டேட் எனப் பலவற்றிலும் முதலீடு செய்வது சிறந்தது.

4. ஓய்வூதியத் திட்டத்தை ஒத்திப்போடுதல்:

'இன்னும் வயது இருக்கே, அப்புறம் பாத்துக்கலாம்' என நினைத்து ஓய்வூதியத்திற்காகச் சேமிக்காமல் இருப்பது மிகப்பெரிய தவறு. நீங்கள் இளம் வயதிலேயே சிறிய தொகையைச் சேமிக்கத் தொடங்கினால், அது காலப்போக்கில் பல மடங்காகப் பெருகும். உதாரணமாக, 25 வயதில் மாதந்தோறும் ரூ.5,000 முதலீடு செய்வது, 40 வயதில் தொடங்குபவரை விட மிகப்பெரிய ஓய்வூதிய நிதியை உருவாக்கும். எனவே, தாமதிக்காமல் இப்போதே உங்கள் ஓய்வூதியத்திற்கான முதலீட்டைத் தொடங்குங்கள்.

5. வருமானத்திற்கு மேல் செலவு செய்தல் (Lifestyle Inflation):

வருமானம் அதிகரிக்கும்போது, அதற்கேற்றாற்போல் செலவுகளையும் அதிகரிப்பது பலருக்குப் பழக்கம். புதிய கார், பெரிய வீடு, ஆடம்பரப் பொருட்கள் என வருமானம் கூடும்போது செலவும் கூடி, சேமிப்பு எதுவும் இல்லாமல் போய்விடும். இந்த ‘வாழ்க்கை முறை பணவீக்கம்’ (Lifestyle Inflation) என்ற வலையில் சிக்காமல் இருப்பது அவசியம். உங்கள் வருமானம் அதிகரிக்கும்போது, செலவுகளைக் கட்டுப்படுத்தி, கூடுதல் பணத்தை முதலீடு செய்வதுதான் பணக்காரர் ஆகும் பாதையில் முக்கிய படி. வருமானத்தில் ஒரு பகுதியைச் சேமிப்பு மற்றும் முதலீடுகளுக்காக ஒதுக்கிவிட்டு, மீதியை மட்டுமே செலவு செய்யுங்கள்.

இதையும் படியுங்கள்:
பணக்காரர் ஆக விரும்பும் உங்களுக்கு இந்த 6 மனநிலைகள் உதவும்!
A man sits anxiously with his head in his hands.

இந்த ஐந்து தவறுகளையும் தவிர்த்து, திட்டமிட்டுச் செயல்பட்டால், வாழ்க்கையில் ஒரு பெரிய நிதி மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்பதில் சந்தேகமில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com