இன்றைய காலத்தில் பணம் சம்பாதிப்பது என்பது ஒரு முக்கியமான விஷயமாக மாறிவிட்டது. குடும்பத்தை நடத்துவதற்கான செலவுகள் அதிகரித்து வரும் நிலையில் நம்முடைய அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும், சிறந்த வாழ்க்கை முறையை வாழ்வதற்கும் போதுமான அளவு பணம் சம்பாதிப்பது அவசியம் ஆகிறது. ஒரு வேலைக்கு சென்று பணம் சம்பாதிப்பதைத் தவிர, மற்றும் பிற பணம் சம்பாதிக்கும் வழிகள் மூலமாகவும் நாம் பணம் ஈட்ட முயல வேண்டும். இந்தப் பதிவில் எளிதாக பணம் சம்பாதிக்கக்கூடிய 5 வழிகள் பற்றி பார்க்கலாம்.
1. ஆன்லைனில் பணம் சம்பாதித்தல்: ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது பற்றி நீங்கள் நிச்சயம் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், இதுவரை எதையும் முயற்சித்திருக்க மாட்டீர்கள். இணையதளத்தின் வளர்ச்சியால் இன்று பல வழிகளில் ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாம். பிளாக்கிங், ஃப்ரீ லான்சிங், YouTube சேனல் தொடங்குவது, ஆன்லைன் ஸ்டோர் தொடங்குவது போன்றவை ஆன்லைனில் பணம் சம்பாதிக்க சில பிரபலமான வழிகள். உங்களுக்கு இதில் ஏதேனும் ஒரு திறமை இருந்தால் அதைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்க முடியும். இதன் மூலமாக நிச்சயம் நீங்கள் வருமானம் ஈட்டலாம்.
2. முதலீடு செய்தல்: பணம் சம்பாதிப்பதற்கு நீங்கள் வேலை செய்துதான் ஆக வேண்டும் என்றில்லை. வேறு வேலையில் சம்பாதித்த பணத்தை முதலீடு செய்வது மூலமாகவும் பணம் ஈட்ட முடியும். அதாவது பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், தங்கம் போன்றவற்றில் முதலீடு செய்து பணம் சம்பாதிக்கலாம். ஆனால் முதலீடு செய்வதற்கு முன் முதலீடுகள் பற்றி நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு தகுதியான நிதி ஆலோசகரிடம் ஆலோசித்து, உங்களுக்கு ஒரு புரிதலை ஏற்படுத்திக் கொண்ட பின் முதலீடு செய்வது நீங்கள் பணம் இழப்பதில் இருந்து உங்களைப் பாதுகாக்கும்.
3. பகுதிநேர வேலை: உங்களது முழு நேர வேலை போக கூடுதல் நேரம் இருந்தால், அதில் பகுதி நேரமாக வேறு ஏதேனும் வேலை செய்து பணம் சம்பாதிக்கலாம். இப்போது பல நிறுவனங்கள் பகுதிநேர வேலை வாய்ப்புகளை வழங்குகின்றனர். அவற்றைப் பயன்படுத்தி நீங்கள் பணம் சம்பாதிக்க முடியும்.
4. உங்கள் திறமைகளை விற்கவும்: உங்களுக்கு ஏதேனும் ஒரு திறமை இருந்தால் அதைப் பயன்படுத்தி மற்றவர்களுக்கு சேவை செய்து பணம் சம்பாதிக்கலாம். உதாரணமாக நீங்கள் நன்றாக சமையல் செய்வீர்கள் என்றால் வீட்டிலேயே சமைத்து கிளவுட் கிச்சன் முறையில் பணம் ஈட்ட முடியும். உங்களுக்கு இசைக்கருவிகள் வாசிக்க தெரிந்தால், இசை கற்றுக் கொடுக்கலாம். இதுபோல உங்கள் திறமைகளைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்க முடியும்.
5. வாடகை மற்றும் கூடுதல் பொருட்களை விற்பது: நீங்கள் பெரு நகரங்களில் வசிப்பவராக இருந்தால் உங்கள் வீட்டில் இருக்கும் கூடுதல் அறையை Airbnb மூலமாக வாடகைக்கு விட்டு பணம் சம்பாதிக்கலாம். இது பயணிகள் தங்குவதற்கு தற்காலிக இடத்தை வழங்க ஒரு சிறந்த வழியாக இருக்கும். இதன் மூலமாக ஒரு கணிசமான பணத்தை நீங்கள் ஈட்ட முடியும். அதேபோல உங்கள் வீட்டில் தேவையில்லாத பொருட்கள் அதிகமாக இருந்தால், அவற்றை இணையத்தில் விற்பனை செய்தும் பணமாக மாற்றலாம்.
பணம் சம்பாதிப்பது என்பது அனைத்துமே நாம் எப்படி செயல்படுகிறோம் என்பதில்தான் இருக்கிறது. வாய்ப்புகள் என்றுமே உங்கள் கதவைத் தட்டாது. நாம்தான் அதை தேடி கண்டுபிடித்து உருவாக்க வேண்டும்.