சம்பளம் வந்ததும் இதை மட்டும் செய்யுங்க... அப்புறம் பணக்கஷ்டமே வராது!

Money Saving
Money Saving
Published on

நம்மில் பலருக்கும் ஒரு பெரிய கனவு இருக்கும். "எப்படியாவது ஒரு சொந்த வீடு கட்டிடணும்," "குடும்பத்தோட போக ஒரு கார் வாங்கணும்," அல்லது "ரிட்டயர்மென்ட் காலத்துல நிம்மதியா இருக்கணும்" இப்படி ஆசைகள் பலவிதம். ஆனா, சம்பளம் வந்த பத்தாம் தேதியே பர்ஸ் காலியாகிடும்போது, இந்தக் கனவெல்லாம் கலைந்துபோகுது. "என்னப்பா பண்றது, வர்ற சம்பளம் வாய்க்கும் வயிற்றுக்கும் சரியா இருக்கு"ன்னு நாம புலம்புவோம். 

ஆனா உண்மை என்ன தெரியுமா? நாம சம்பாதிக்கிற பணத்தை விட, அதை எப்படிச் செலவு பண்றோம், எப்படிச் சேமிக்கிறோம்ங்கிறதுதான் நம்ம வாழ்க்கைத் தரத்தையே தீர்மானிக்குது. வாங்க, நம்ம கனவுகளை நனவாக்கக்கூடிய அந்த எளிமையான சேமிப்பு ரகசியத்தைப் பார்ப்போம்.

இதையும் படியுங்கள்:
₹1 கோடி சம்பாதிக்க 33 வருஷமா? நம்ம ஏன் இன்னும் பணக்காரர் ஆகல?
Money Saving

அம்மாக்களின் 'கடுகு டப்பா' டெக்னிக்!

நம்ம சின்ன வயசுல பார்த்திருப்போம். அப்பா சம்பளம் வாங்கிக் கொடுத்தா, அம்மாக்கள் சத்தமே இல்லாம ஒரு தொகையை எடுத்து அஞ்சரைப் பெட்டியிலயோ, அரிசி டப்பாக்குள்ளயோ போட்டு வைப்பாங்க. என்னைக்காவது வீட்டுல திடீர்னு பணக்கஷ்டம் வரும்போது, அந்தப் பணம்தான் கடவுள் மாதிரி நம்மைக் காப்பாத்தியிருக்கும். அந்தப் பழக்கத்தை நாம ஏன் மறந்தோம்? அதுதான் முதல் படி. நம்ம குழந்தைகளுக்கும் உண்டியல் கொடுத்து, சின்ன வயசுல இருந்தே காசோட அருமையையும், சேமிப்போட அவசியத்தையும் புரியவைக்க வேண்டியது நம்ம கடமை.

50 - 30 - 20 ஃபார்முலா தெரியுமா?

இதுதாங்க பணக்காரங்க ஃபாலோ பண்ற சீக்ரெட். உங்க சம்பளத்தை மூணு பங்கா பிரிக்கணும்.

  • 50% (அவசியம்): இது வீட்டு வாடகை, மளிகை, கரண்ட் பில், பால், மருந்து செலவுகள். இது இல்லாம வாழவே முடியாதுங்கிற விஷயங்களுக்கு சம்பளத்துல பாதிக்கு மேல் போகக்கூடாது.

  • 30% (ஆசை): இது சினிமா, ஹோட்டல், புது டிரஸ், அவுட்டிங் போறது. நம்ம மனசுக்கு பிடிச்ச விஷயங்களுக்காக இந்தத் தொகையை ஒதுக்கலாம்.

  • 20% (எதிர்காலம்): இதுதான் ரொம்ப முக்கியம். சம்பளம் கைக்கு வந்த உடனே, முதல்ல இந்த 20 சதவீதத்தை எடுத்துத் தனியா வச்சிடணும். "செலவு போக மிச்சம் இருந்தா சேமிக்கலாம்"னு நினைச்சா, கடைசி வரைக்கும் சேமிக்கவே முடியாது. சேமிச்சது போகத்தான் செலவே பண்ணணும்.

இதையும் படியுங்கள்:
Active ஆக இல்லாத வங்கிக் கணக்கில் இருக்கும் பணம்... உடனே உங்க கைக்கு!
Money Saving

பணம் சும்மா இருக்கக்கூடாது, வளரணும்!

பீரோல பூட்டி வைக்கிற பணம் தூங்கிக்கிட்டே இருக்கும். அதை வேலைக்கு அனுப்பணும். உங்களுக்குப் பயமா இருந்தா, போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு, பேங்க் ஆர்டி (RD), எஃப்டி (FD) மாதிரி பாதுகாப்பான இடங்கள்ல முதலீடு பண்ணுங்க. இல்ல, "நாங்க ரெண்டு பேரும் சம்பாதிக்கிறோம், கொஞ்சம் ரிஸ்க் எடுக்கலாம்"னு நினைச்சா, மியூச்சுவல் ஃபண்ட், தங்கம் அல்லது ரியல் எஸ்டேட் பக்கம் கவனத்தைத் திருப்புங்க. நிலத்திலோ, தங்கத்திலோ போடுற காசு, நீங்க தூங்கும்போது கூட உங்களுக்காக வளர்ந்துகிட்டே இருக்கும்.

இன்றைய காலகட்டத்துல ஒரு லட்சம் சம்பாதிக்கிறது பெரிய விஷயம் இல்ல. அதுல எவ்வளவு ரூபாயை நாம நமக்காக தக்கவச்சுக்கிறோம்ங்கிறதுதான் சாதனை. வீடு, கார், கல்யாணம்னு எல்லா கனவுகளுக்கும் அஸ்திவாரம் இந்தச் சேமிப்புதான். 

இன்னைக்கு நாம சேர்க்கிற ஒவ்வொரு ரூபாயும், நாளைக்கு ஒரு பெரிய பிரச்சனையில் இருந்து நம்மைக் காப்பாற்றும் ஒரு ஆயுதம். அதனால, தள்ளிப்போடாம இன்னைக்கே, இப்பவே உங்க சேமிப்பைத் தொடங்குங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com