சமூக வலைத்தளங்களை பார்க்கும் போது நாம் மிகவும் ஏழையாக இருக்கிறோம் என்ற எண்ணம் நமக்குள் வருவது வழக்கம். 22 வயதில் லட்சங்களில் சம்பாதிக்கும் நபர்களைப் பார்க்கும்போது நமது வருமானம் மிகச் சிறியதாகத் தோன்றும். ஆன்லைன் பதிவுகளைப் பார்த்து நானும் ஒரு காலத்தில் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன். ஆனால் இந்தியாவின் உண்மையான வேலைவாய்ப்பு நிலவரம் இணையத்தில் நாம் பார்க்கும் மாயைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது.
உண்மையான தரவுகளின் நிலவரம்!
அரசாங்க தரவுகளின்படி சராசரி வருமானம் மிகக் குறைவாகவே உள்ளது. 21 வயதில் பலரும் படித்துக்கொண்டும் வேலை தேடிக்கொண்டும் தான் இருக்கிறார்கள். இந்த ஆரம்ப காலகட்டத்தில் மிக பிரம்மாண்டமான மாத சம்பளம் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது மிகப்பெரிய தவறாகும். இந்த வயதில் வேலை கிடைப்பதே சவாலானது என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
21 வயதில் உங்களுக்கு வேலை கிடைத்தால் 30000 பெறுவது ஒரு சிறந்த தொடக்கமாகும். பணத்தை நோக்கி ஓடுவதை விட திறன்களை வளர்ப்பதில் கவனம் செலுத்துவது புத்திசாலித்தனம். தகவல் தொடர்பு திறன்களை வளர்த்துக்கொண்டு நவீன தொழில்நுட்பங்களை கற்பது உங்கள் மதிப்பை உயர்த்தும். முதல் வேலையில் கிடைக்கும் தொகையை விட அங்கு கிடைக்கும் அனுபவமே மிகவும் முக்கியமானது. இதை என் தனிப்பட்ட அனுபவத்திலும் நான் நன்றாக உணர்ந்துள்ளேன்.
அனுபவம் கொடுக்கும் மிகப்பெரிய மாற்றம்!
உங்களுக்கு 25 வயது ஆகும்போது வாழ்க்கை சற்று தீவிரமாக மாறும். நண்பர்கள் கார் வாங்குவார்கள் அல்லது திருமணம் செய்வார்கள். இந்த கட்டத்தில் உங்கள் 4 வருட அனுபவம் பலன் தரத் தொடங்கும். பல அறிக்கைகளின்படி இந்த வயதில் 60000 பெறுவது ஒரு நல்ல நிலையாகும். சென்னை அல்லது பெங்களூர் போன்ற பெருநகரங்களுக்கு இடம் பெயர்வது உங்கள் வருமானத்தை கணிசமாக உயர்த்த உதவும். நகரங்கள் நமது வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்த வயதில் நீங்கள் தேர்ந்தெடுத்த துறை சார்ந்த திறன்கள் உங்களின் அடையாளமாக மாற வேண்டும். நிறுவனத்திற்கு நீங்கள் எவ்வளவு லாபம் ஈட்டித் தருகிறீர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும். மேம்பட்ட தொழில்நுட்பத் திறன்களை உங்கள் ரெஸ்யூமில் சேர்ப்பது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். நீங்கள் இனி ஒரு தொடக்க நிலையில் இல்லை என்பதால் அலுவலக பொறுப்புகளும் வேலைப்பளுவும் இயற்கையாகவே அதிகரிக்கும். இதை சமாளிக்க நாம் தயாராக இருக்க வேண்டும்.
புதிய பொறுப்புகள்!
30 வயதை பலரும் வாழ்க்கையின் ஒரு இறுதிப் புள்ளியாக நினைக்கிறார்கள். இது வெறும் எண்கள் மட்டுமே. இந்த வயதில் 100000 வரை ஈட்டுவது ஒரு யதார்த்தமான இலக்காகும். எல்லாரும் இந்த இலக்கை அடைவதில்லை என்பது தான் உண்மை. நிறுவனத்தின் முக்கிய பிரச்சனைகளை சுயமாக தீர்த்து வைப்பதும் பெரிய குழுக்களை வழிநடத்துவதும் தான் இந்த வயதில் அதிக வருமானத்தை ஈட்டித் தரும். இது ஒரு சிறந்த தலைமைப் ப்ணபு.
பணத்தை தாண்டிய வாழ்க்கை!
இணையத்தில் இருக்கும் டாப் 1 சதவீத மக்களுடன் உங்கள் வருமானத்தை ஒப்பிடுவது உங்கள் நிம்மதியை கெடுத்துவிடும். உண்மையான வெற்றி ஒவ்வொரு மாதமும் ஒரு பெரிய மாத சம்பளம் வாங்குவது மட்டும் கிடையாது. உங்களுக்கு கிடைக்கும் சுதந்திரம் மற்றும் ஆரோக்கியம் ஆகியவை மிகவும் முக்கியம். தொடர்ந்து புதுமைகளை கற்றுக்கொள்வது உங்கள் தொழில் வாழ்க்கைக்கு ஒரு பெரிய பலமாக அமையும். நிம்மதியான தூக்கமே நிஜமான செல்வம்.
கண்களை மூடிக்கொண்டு பணத்தை மட்டும் துரத்துவது எங்கும் கொண்டு செல்லாது என்பதை நான் தாமதமாகவே உணர்ந்தேன். திறன்களை பெருக்குவதில் மட்டுமே நாம் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் 20000 வாங்கினாலும் அல்லது 200000 வாங்கினாலும் அதை எப்படி சேமிக்கிறீர்கள் என்பதே எதிர்காலத்தை தீர்மானிக்கும்.
தொடர்ந்து கற்றுக்கொண்டு பொறுமையாக இருந்தால் உங்கள் தொழில் வாழ்க்கை தானாகவே அழகாக வளரும். உங்களை மற்றவர்களுடன் ஒப்பிடுவதை இன்றுடன் நிறுத்தி விடுங்கள். உங்களை உண்மையிலேயே மெருகேற்றும் விஷயங்களில் ஈடுபடுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
Reference: