குறைந்த சம்பளம் இருந்தபோதிலும் நிதி ரீதியாக நல்ல நிலையில் இருக்க முடியுமா? இருக்கிறார்களே! எப்படி?

Financial planning
Financial planning
Published on

குறைந்த சம்பளம் இருந்தபோதிலும் நிதி ரீதியாக நல்ல நிலையில் இருப்பவர்கள் கடைப்பிடிக்கும் சிக்கனமான ஆறு பழக்க வழக்கங்கள்:

பொதுவாக யாராவது வசதியாக வாழ்வதைப் பார்க்கும்போது, நமக்கு அவர்கள் அதிக சம்பளம் வாங்குகிறார்கள் என்று நினைக்க தோன்றும். ஆனால் எல்லோருக்கும் நீங்கள் நினைப்பது போல் நல்ல சம்பளம் இருக்கும் என்று திட்டவட்டமாக கூற முடியாது.

அதிக சம்பளம் வாங்காமலேயே ஒரு சீரான நிதி நிலையை உருவாக்கக்கூடிய ஆச்சரியப்படத்தக்க நபர்களும் இருக்கின்றனர்.

எவ்வாறு அவர்கள் சிக்கனம் செய்து தங்களின் நிதி நிலையை சீராக வைத்திருக்க முடியும் என்பதை பார்க்கலாம்...

இது வெறும் தனிப்பட்ட நிதியைப் பற்றியது மட்டுமல்ல. வணிகத்திலும் வாழ்க்கையிலும் நீங்கள் செழிக்க உதவும் மனநிலையை வளர்ப்பது பற்றியுமாகும்.

1. அவர்கள் சேமிப்பிற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள்:

ஒரு நாள் உங்களிடம் பணம் இருந்தால், மறுநாள் அது இல்லாமல் போகலாம். திடீர் செலவுகள் திடீரென்று வரலாம், உங்களுக்குத் தெரிவதற்கு முன்பே, நீங்கள் சம்பாதித்த பணம் உங்கள் கைகளிலிருந்து நழுவிவிடும்.

ஆனால், சாதாரண சம்பளம் இருந்தபோதிலும் நிதி ரீதியாக வசதியாக இருக்க விரும்பும் நபர்களிடம் ஒரு ரகசிய ஆயுதம் உள்ளது: அவர்கள் சேமிப்பை கடைப்பிடிப்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

அவர்கள் எதிர்காலத் தேவைகளுக்காக தங்கள் சம்பளத்தில் ஒரு பகுதியை தொடர்ந்து சேமித்து வைக்கிறார்கள். இந்தப் பழக்கம் ஒவ்வொரு பைசாவையும் சேமித்து வைப்பது பற்றியது அல்ல. தீடிரென வரும் நிதி புயல்களைத் தாங்கும் பாதுகாப்பு வலையை உருவாக்கும் திட்டத்தை பற்றியது.

2) அவர்கள் பட்ஜெட் தயாரிப்பதில் வல்லவர்கள்:

குறைந்த சம்பளத்தில் நிதி ரீதியாக நல்ல நிலையில் இருப்பவர்கள் பொதுவாக கவனமாக பட்ஜெட் திட்டமிடுபவர்கள். ஒவ்வொரு பைசாவும் எங்கு செல்கிறது என்பதை அவர்கள் நன்றாக அறிந்த பிறகே செலவு செய்வார்கள்.

மேலும் அவர்கள் தங்களின் செலவுகளை அவர்களின் முன்னுரிமைகளுக்கு ஏற்றவாறு தான் செய்வார்கள். மேலும் அவர்கள் மாதந்தோறும் அவ்வப்போது செலவை கணக்கிடுவார்கள். சில சமயம் அதிகமாக தோன்றினால் எங்கு வீண் செலவு செய்யப்பட்டுள்ளது என்பதை ஆராய்ந்து அதை குறைத்து கொள்வார்கள். உதாரணத்திற்கு அந்த மாதம் மூன்று முறை வெளியே சென்று சாப்பிட்டு இருந்தாலோ அல்லது எதையாவது வாங்கி இருந்தாலோ அல்லது சினிமாவிற்கு சென்று இருந்தாலோ அடுத்த மாதத்தில் அதை குறைத்து கொள்வார்கள்.

ஒரு பட்ஜெட்டை உருவாக்கி அதை கடைபிடிப்பதன் மூலம், செலவுகளைக் கட்டுப்படுத்தி, அதிகமாகச் சேமிக்க முடியும் என்பதே அவர்களுடைய அசைக்கமுடியாத நம்பிக்கை.

நிதி ரீதியாக வசதியாக இருப்பது என்பது நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள் என்பது பற்றியது அல்ல - நீங்கள் எவ்வளவு வைத்திருக்கிறீர்கள் என்பதை பற்றியது.

ஆகவே, பட்ஜெட் என்பது உங்கள் நிதியைக் கட்டுப்படுத்துவதற்கான முதல் படியாகும்.

3) அவர்கள் முடிந்தவரை கடனை தவிர்க்கிறார்கள்:

ஒரு சாதாரண சம்பளத்தில் நிதி ரீதியாக வசதியாக இருப்பவர்கள் முடிந்தவரை கடனைத் தவிர்க்கிறார்கள். மேலும் அவர்கள் கடன் வாங்கியிருந்தால், அதை விரைவில் செலுத்தும் பழக்கத்தை கையாளுகிறார்கள்.

இந்த கடன் கிரெடிட் கார்டு, வீட்டு லோன், குழந்தைகளுக்கான கல்வி லோன் மற்றும் அடமானங்கள் உட்பட எது வேண்டுமானாலும் இருக்கலாம்.

இவற்றை அடைக்க எவ்வளவு அதிக நேரம் எடுத்துக்கொள்கிறோமோ, அவ்வளவு அதிகமாக வட்டி செலுத்த வேண்டியிருக்கும் என்பதை அவர்கள் நன்றாக அறிவார்கள்.

எனவே, அவர்கள் புதிய பொருட்களை கடனில் வாங்குவதற்குப் பதிலாக, முழு தொகையையும் செலுத்தி வாங்க முடிந்தால் வாங்குவார்கள் இல்லையென்றால் நஷடம் ஏற்படாமல் வாங்கக்கூடிய வேறு ஒரு முறையைத் தேர்வுசெய்வார்கள்.

4) அவர்கள் புத்திசாலித்தனமான முதலீடுகளைச் செய்கிறார்கள்:

ஒரு சாதாரண சம்பளத்தில் நிதி ரீதியாக வசதியாக இருப்பவர்கள், முதலீடு செய்வதன் முக்கியத்துவத்தையும் புரிந்துகொள்கிறார்கள்.

முதலீடு செய்வது என்பது பங்குச் சந்தையில் பணத்தை போடுவது அல்லது ரியல் எஸ்டேட் வாங்குவது போன்றவை மட்டுமல்ல. அவர்கள் பணத்தை அதிக மகசூல் தரும் சேமிப்புக் கணக்கிலோ அல்லது ஓய்வூதிய நிதியிலோ அல்லது FD இலோ போட்டு எளிமையான முறையில் முதலீடு செய்து சேமிக்கிறார்கள்.

முதலீடுகள் பாதுகாப்பு உணர்வை வழங்குவதோடு மட்டுமல்லாமல் எதிர்கால நிதி பிரச்னைக்கும் வழி வகுக்கும். இது குறைவான சம்பளம் சம்பாதித்தாலும் செல்வத்தை வளர்க்க உதவும் ஒரு முக்கிய பழக்கமாகும்.

இதையும் படியுங்கள்:
இந்தியாவைப் பார்த்து பொறாமைப்படும்(?) வெளிநாட்டினர் - இதுதான் காரணம்!
Financial planning

5) அவர்கள் எப்போதும் நிபுணர்களிடம் ஆலோசனை பெறுகிறார்கள்:

ஒரு சாதாரண சம்பளத்தில் நிதி ரீதியாக வசதியாக இருப்பவர்கள் எப்போதும் பொருளாதாரத்தைப் பற்றி கற்றுக் கொண்டே இருப்பார்கள்.

அவர்கள் புத்தகங்களைப் படிக்கிறார்கள், கருத்தரங்குகளில் கலந்துகொள்கிறார்கள், நிதி ஆலோசகர்களிடமிருந்து ஆலோசனை பெறுகிறார்கள். அவர்கள் தனிப்பட்ட நிதி மற்றும் முதலீட்டு உத்திகள் குறித்து தொடர்ந்து தங்களைப் பயிற்றுவித்துக் கொள்கிறார்கள்.

இந்தத் தொடர்ச்சியான கற்றல், அவர்களின் பணத்தைப் பற்றி தகவலறிந்த முடிவுகளை எடுக்க உதவுவது மட்டுமல்லாமல், நிதி உலகின் சமீபத்திய போக்குகள் மற்றும் வாய்ப்புகள் குறித்தும் அவர்களைப் புதுப்பித்த நிலையில் வைத்திருக்கிறது.

இதையும் படியுங்கள்:
முதலீட்டுத் திட்டங்களின் மீது கடன் பெறுவது சரியாக இருக்குமா?
Financial planning

6) அவர்கள் சீரான முறையை கடைப்பிடிக்கிறார்கள்:

ஒரு சாதாரண சம்பளத்தில் நிதி ரீதியாக வசதியாக இருப்பவர்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் இருந்தால், அது இதுதான்... அவர்கள் சீரான முறையை பின்பற்றுகிறார்கள்.

அவர்களின் நிதிப் பழக்கவழக்கங்களின் மூலப்பொருளாக இருப்பது இந்த நிலைத்தன்மைதான்.

அவர்கள் தொடர்ந்து சேமித்து கொண்டே இருப்பார்கள்.

அவர்கள் வசதியாக இருக்கும்போது கடனைத் தவிர்ப்பது மட்டுமல்லாமல், கடனிலிருந்து விடுபடுவதையும் ஒரு குறிக்கோளாகக் கொண்டுள்ளனர். அவர்கள் விரும்பும் போது மட்டும் முதலீடு செய்வதில்லை. அவர்களிடம் ஒரு நிலையான முதலீட்டுத் திட்டம் எப்போதும் இருக்கிறது.

மேற்கூறிய கருத்துக்களின் மூலமாக, அதிக சம்பளம் வாங்குபவர்களுக்கு மட்டுமே நிதி வசதி என்பது பிரத்தியேகமானது அல்ல என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

நினைவில் வைத்து கொள்ளுங்கள், நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல, உங்களிடம் இருப்பதை நீங்கள் எவ்வாறு நிர்வகிக்கிறீர்கள் என்பதுதான் மிக மிக முக்கியம்.

உங்கள் நிதிப் பழக்கவழக்கங்களில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் கூட காலப்போக்கில் உங்கள் நிதி ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

ஆகவே நன்றாக சிந்தித்து, இன்றே அந்த நடவடிக்கையை எடுங்கள். ஏனென்றால் நிதி வசதி என்பது, உங்கள் சம்பளம் எதுவாக இருந்தாலும் சரி, முற்றிலும் உங்கள் கைகளுக்கு எட்டும் தூரத்தில் தான் இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
சீனா கெத்து, இந்தியா வெத்து... ஏன் தெரியுமா?
Financial planning

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com