மனோஜை அடி வெளுக்கும் அண்ணாமலை... அனல் பறக்கும் புரோமோ!

Siragadikka Aasai
Siragadikka Aasai
Published on

விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னனி இடத்தை பிடித்து வரும் சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது விறுவிறுப்பான கதை களத்தை எட்டியுள்ளது.

கடந்த வாரம் சீரியலில் முத்துவின் பாட்டியின் பிறந்த நாள் கொண்டாட்டம் இருந்தது. மனோஜ் கடையில் பெரிய ஆர்டர் வந்ததால் லட்சக்கணக்கில் பொருள்களை விற்று ஏமாந்து விட்டார். இதனால் விஜயா, மீனாவின் நகையை கொடுத்தார். ஆனால், விஜயா அடமானம் வைக்காமல் விற்று விட்டார்.

இன்னொரு பக்கம் வீட்டில் முத்து பாட்டிக்கு கிப்ட் வாங்க, மீனா நகையை வாங்கி கடைக்கு சென்று இருந்தார். ஆனால், அது எல்லாம் கவரிங் என்று தெரிந்தது. அது பிறந்தநாள் முடிந்தவுடன் கவரிங் நகை விஷயத்தை அண்ணாமலை இடம் முத்து சொன்னார். அண்ணாமலை அதிர்ச்சியாகி விஜயாவிடம் கேட்டவுடன், எனக்கு தெரியாது. மீனா வீட்டில் தான் நகை மாறி இருக்கும். அவருடைய தம்பி தான் இந்த வேலையை செய்திருப்பான் என்று சொன்னார். இதனால் கோபமடைந்த மீனா, நாங்கள் ஏழைகள் தான். ஆனால், இப்படி எல்லாம் செய்ய மாட்டோம் என்று வாதம் செய்தார்.

இறுதியில் முத்து, இந்த வேலையை யார் செய்தது என்று எனக்கு தெரியும். ஆதாரத்துடன் நிரூபிக்கிறேன் என்கிறார். அதற்குப் பிறகு சுருதியை வைத்து வேற குரலில் மனோஜ் சுருதியை பேச வைத்தார். ஆனால், உஷாரான மனோஜ் சமாளித்து தப்பித்து விடுகிறார். பின் முத்து, மீனா இருவரும் விஜயாவின் தோழி பார்வதி வீட்டிற்கு உண்மையை கண்டுபிடிக்க சென்றார்கள். கடைசியில் உண்மை சொல்லும் வரும் நேரத்தில் விஜயா வந்து தடுத்து நிறுத்துகிறார். மேலும், செல்வம்- முத்து இருவரும் பிரிட்ஜ் வாங்க ஒரு கடைக்கு சென்றார்கள். ஆனால், அந்த கடையில் இருந்தவர்கள் மனோஜ் இடம் பிரிட்ஜை ஏமாற்றி வாங்கியுள்ளனர்.

இந்த கும்பல் செய்த திருட்டு வேலையை அறிந்த போலீசார் எல்லோரையும் கைது செய்தது. அப்போது போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த மனோஜ் நடந்ததைப் பற்றி போலீஸ் இடம் சொல்வதை மறைந்து நின்று வீடியோ எடுத்த முத்து வீட்டில் காண்பிக்கிறார். இதை பார்த்தவுடன் அதிர்ச்சியாகி விஜயா, ரோகினி நிற்கிறார்கள். வீட்டில் உள்ள எல்லோருமே எப்படி பணம் வந்தது? என்று கேட்க, மனோஜை அடித்து அந்த நேரத்தில் காப்பாற்றி விடுகிறார் விஜயா. கடைசியில் மனோஜ், ரோகினி இடம் மீனாவின் நகையை அடகு வைத்து தான் அந்த பணத்தை கொடுத்தேன் என்று உண்மையை உளறி விடுகிறார்.

இதையும் படியுங்கள்:
யூடியூப்பர் இர்பானுக்கு திருமண அழைப்பிதழ் வைத்த நெப்போலியன்! யாருக்கு திருமணம்?
Siragadikka Aasai

நேற்று எபிசோடில், எப்படியாவது மனோஜ் வாயில் உண்மையை வர வைக்க வேண்டும் என்று முத்து தில்லாலங்கடி வேலையை செய்கிறார். ஒரு சாமியாரிடம் மந்திரித்து வாங்கி வந்த ஒரு பழம் என்று பொய் சொல்லி, அந்த நகையை யார் மாற்றி வைத்தார்களோ அவர்களுக்கு வாய் கோணி விடும் என்று சாமி அறையில் வைக்கிறார். இதனால் மனோஜ், விஜயா இருவருமே பயந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், ரோகினி சமாதானம் சொல்கிறார்.

இந்த நிலையில் நாளைக்கான எபிசோட் புரோமோவில், மனோஜை, அண்ணாமலை பயங்கரமாக அடிக்கிறார். இதை விஜயா தடுக்க வருகிறார். தடுக்க வந்த விஜயாவையும் இதுக்கெல்லாம் நீதான் காரணம் என அடிக்க போகிறார். இதை பார்த்த ரசிகர்கள், இது மட்டும் கனவாகிவிட கூடாது என கமெண்ட் செய்து வருகின்றனர். ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்த அந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com