சீரியல்களுக்கு ஊர்களில் தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றனர். வயதானவர்கள் வீட்டில் இருப்பவர்களே சீரியல் பார்ப்பார்கள் என்று நம்மிடம் ஒரு பிம்பம் உள்ளது. ஆனால் வேலைக்கு செல்லும் பெண்கள், ஆண்கள், கல்லூரி செல்லும் ஆண்கள், பெண்கள் என பல தரப்பட்ட மக்களும் சீரியல் பார்த்து வருகின்றனர்.
அப்படி ரசிகர்களின் பேவரைட் ஆன ஒரு சீரியல் தான் பாக்கியலட்சுமி. 1000 எபிசோட்களை கடந்து சாதனை படைத்த பாக்கியலட்சுமி சீரியல் வாரம் வாரம் டிஆர்பியில் டாப் 3 இடங்களை பிடித்து விடும். ஆனால் தற்போது டிஆர்பியில் பின் தங்கிய இடத்திற்கு சென்றதால், மீண்டும் அமிர்தாவின் கணவரை அழைத்துள்ளனர்.
இவரின் வருகையால் சீரியலில் மீண்டும் விறுவிறுப்பாகியுள்ளது. ஒரு பக்கம் ஜெனி, செழியன் வாழ்க்கை அந்தரத்தில் தொங்குதே என்று கவலைப்பட்டிருக்கும் பாக்கியாவிற்கு ஒரு நாள் கணேஷின் தாயார் போன் செய்கிறார்கள். கணேஷின் அப்பாவிற்கு முடியவில்லை, அமிர்தாவையும் குழந்தையும் அழைத்து வா என கூறுகிறார்.
இவரின் பேச்சை நம்பி அமிர்தாவையும் நிலாவையும் அழைத்து சென்ற பாக்கியாவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது. அப்போது அங்கிருந்த கணேஷ் கத்தி முனையில் அமிர்தாவையும், நிலாவையும் அழைத்து சென்றுள்ளார். இதோடு இல்லாமல் இன்றைய எபிசோட்டில் தாலிகட்டவும் முயற்சிக்கிறார்.
எப்படியோ அட்ரஸை கண்டுபிடித்த எழில், பாக்கியா, செழியன் தாலி கட்டும் நேரத்தில் எண்ட்ரி கொடுத்தனர். இதோடு இன்றைய எபிசோட் நிறைவடைந்தது. தொடர்ந்து அவர்கள் அமிர்தாவை அங்கிருந்து மீட்டு செல்வார்களா அல்லது கணேஷ் அனைவரையும் எதாவது செய்துவிடுவாரா என வரும் எபிசோட்டில் தான் தெரியவரும்.
நேற்றைய எபிசோட்டில் தாலி கட்டும் நேரத்தில் எண்ட்ரி ஆன செழியன், எழில், பாக்கியா மூவரும் சேர்ந்து திருமணத்தை நிறுத்த இதனால், ஆத்திரமடைந்த கணேஷ் அமிர்தாவை அடிக்கிறார்.
இதனை பார்த்து கடுப்பான எழில் கணேஷை தாக்க முற்பட இருவருக்கும் மோதல் ஏற்படுகிறது. தொடர்ந்து செழியனும் சேர்ந்து கட்டி புரள, திடீரென போலீசுடன் பழனிசாமி எண்ட்ரி கொடுத்தார். போலீசார் கணேஷை அழைத்து செல்ல, எழில் அமிர்தாவை பத்திரமாக மீட்டு வீட்டிற்கு அழைத்து சென்றார்.