அன்பு சச்சரவுகளை குறைக்கும்... ப்ரீஸ் டாஸ்க்கின் முடிவு இதுதான்... பிக்பாஸ் புரோமோ!

அன்பு சச்சரவுகளை குறைக்கும்... ப்ரீஸ் டாஸ்க்கின் முடிவு இதுதான்... பிக்பாஸ் புரோமோ!

பிக்பாஸ் 7வது சீசனில் பல எதிர்பாராத சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதுவரை 6 சீசன்களில் இல்லாத பல விஷயங்கள் இந்த சீசனில் பார்க்க முடிகிறது. முதலில் இந்த சீசனில் 2 வீடுகள் உருவாக்கப்பட்டது. பிக்பாஸ், ஸ்மால் பாஸ் என இரு வீடுகள் உருவாக்கப்பட்டது. கடந்த அக்டோபர் மாதம் 1ஆம் தேதி பிக்பாஸ் 7வது சீசன் தொடங்கி தற்போது 80 நாட்களை கடந்து ஓடி கொண்டிருக்கிறது.

தினசரி புரோமோக்கள் வெளியாகி எதிர்பார்ப்பை தூண்டி வரும் நிலையில், இன்றைய புரோமோக்கள் வெளியாகியுள்ளது. அதாவது இந்த வாரம் ப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. தினசரி போட்டியாளர்களின் குடும்பத்தார்கள் உள்ளே சென்று அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறார்கள்.

அந்த வகையில் சனிக்கிழமையான இன்று தொகுப்பாளர் கமல்ஹாசன் போட்டியாளர்களை அகம் டிவி வழியே சந்திக்கிறார். ஒரு வாரம் நடைபெற்ற ப்ரீிஸ் டாஸ்க்கில் பல மகிழ்ச்சிகள், சண்டைகள், சோகங்கள் என அடுத்தடுத்து பல எமோஷன்கள் ஏற்பட்டது.

இதனால் போட்டியாளர்களிடையே இந்த வாரம் சண்டையே நடைபெறவில்லை. இந்த நிலையில் இன்று வெளியான புரோமோவில், அன்பு மிகுதியாக இருந்ததால் சச்சரவுகள் குறைந்ததாக கமல்ஹாசன் தெரிவிக்கிறார். மேலும், வீட்டிற்கு உள்ளே வந்த போட்டியாளர்களின் குடும்பத்தார்கள் வெளியில் நடப்பதை சொல்லிக்கொடுத்தையும் சுட்டிக்காட்டினார்.

இதையும் படியுங்கள்:
சர்ப்ரைஸ் கொடுத்த மகன்கள்.. ஷாக்கில் உறைந்த விசித்ரா!
அன்பு சச்சரவுகளை குறைக்கும்... ப்ரீஸ் டாஸ்க்கின் முடிவு இதுதான்... பிக்பாஸ் புரோமோ!

தொடர்ந்து போட்டியாளர்களிடமே குடும்பத்தார் என்ன சொன்னார் என கேட்கிறார். இதனால் என்ன செய்யலாம் என நினைக்கிறீர்கள் என்றும் கேட்டார். முதலில் எழுந்த விக்ரம் யாரை நம்பாதே என்று சொன்னார்கள் என தெரிவிக்கிறார். தொடர்ந்து பூர்ணிமா, முதல் வாரத்தில் இருந்தே விளையாடிருந்தால் டாப் ப்ளேயராக இருந்திருப்பேன் என கூறுகிறார். அதற்கு கமல் இப்போ நீங்க டாப் ப்ளேயர் இல்லையா என கேட்கிறார். இப்படி எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் இந்த புரோமோக்கள் அமைந்துள்ளது. அடுத்து என்ன நடக்கிறது என்பதை எபிசோட்டில் தான் பார்க்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com