கேப்டன் விஜயகாந்த் குறித்து பிக்பாஸில் நினைவு கூர்ந்த கமல்ஹாசன்!

கேப்டன் விஜயகாந்த் குறித்து பிக்பாஸில் நினைவு கூர்ந்த கமல்ஹாசன்!

மறைந்த கேப்டன் விஜயகாந்திற்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் அஞ்சலி செலுத்தி நினைவுகளை பகிர்ந்து கொண்டார் தொகுப்பாளர் கமல்ஹாசன்.

கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் நேற்று முன் தினம் காலமானார். பல வருடங்களாக இவர் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருந்த நிலையில், மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போதே இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

இவரின் மறைவு ஒட்டு மொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியடைய செய்தது. தொடர்ந்து லட்சக்கணக்கானோர் விஜயகாந்தை காண தீவுத்திடலில் குவிந்தனர். எந்த தலைவர்களுக்கும் இல்லாத அளவாக பெருதிரளான மக்கள் வெள்ளத்தை விஜயகாந்த் மறைவில் காணமுடிந்தது.

இறுது ஊர்வலத்தில் 200 பேர் தான் பங்கேற்க வேண்டும் என்ற அறிவிப்பு இருந்தும், மக்கள் கூட்டம் கூட்டமாக கதறி அழுதபடி நடந்தே ஊர்வலம் வந்தனர். தொடர்ந்து இவரின் உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் புதைக்கப்பட்டது. இப்படி ஒரு மாமனிதரின் இறப்பை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசியுள்ளார் கமல்ஹாசன்.

இதையும் படியுங்கள்:
வார இறுதியில் வெளுத்து வாங்க தயாரான கமல்.. அடுத்து என்ன நடக்கும்?
கேப்டன் விஜயகாந்த் குறித்து பிக்பாஸில் நினைவு கூர்ந்த கமல்ஹாசன்!

கமல்ஹாசன், விஜயகாந்த் எல்லாம் ஒன்றாக நடித்திருப்பதால் நேரில் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தினார். பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் மக்களுக்கு வெளியே என்ன நடக்கும் என தெரியாததால் அவர்களுக்கு இதை கூறியுள்ளார். ஏற்கனவே கலைஞர் கருணாநிதி உயிரிழந்த போதும் உள்ளே இருந்த போட்டியாளர்களுக்கு இதை தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்த வைத்தார்.

இதனை பார்த்த மக்களும் விஜயகாந்தின் மறைவை ஏற்று கொள்ள முடியாமல் கண்கலங்கினார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com