தமிழ் சினிமாவின் முக்கிய ஹீரோவான விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.
ஜேசன் சஞ்சய் கனடாவில் உள்ள டோரொண்டோ பிலிம் பள்ளி மற்றும் இங்கிலாந்தில் உள்ள சென்ட்ரல் பிலிம் பள்ளியில் சினிமா சார்ந்த படிப்பை முடித்துள்ளார்.
அவர் சினிமா சார்ந்த துறையில் படித்து கொண்டிருக்கும்போதே pull the trigger என்ற ஆங்கில குறும் படத்தை இயக்கினார். அந்த படம் கடந்த ஏப்ரல் மாதம் யூட்யூப் தளத்தில் வெளியானது.
சஞ்சய் படம் எடுக்கும் பொழுது எடுத்த மேக்கிங் ஸ்டில்ஸும் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலே வெளியிட்டிருந்தார். சில மாதங்களுக்கு முன்னர் மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக் படம் ஒன்றில் அவர் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகவிருக்கிறார் என்ற செய்தி வெளியானது.
ஆனால் அந்த செய்தி உண்மையா வதந்தியா என்று யோசிக்கும் அளவிற்கு இப்போது தடம் இல்லமால் போனது. அதைபற்றி இயக்குனர் நெல்சன் ஒரு பேட்டியில் நடிகர் விஜயிடம் சஞ்சய் கதாநாயகனாக அறிமுகம் ஆகப்போவது உண்மையா என்று கேள்வி கேட்டார்.
அதற்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த நடிகர் விஜய், அது அவர் விருப்பம், சஞ்சய் படம் இயக்க வேண்டும் என்ற ஆசையில் தான் உள்ளார். அதுவும் தனது முதல் படத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வைப்பது தனது மிக பெரிய கனவு என்று கூறியதாக விஜய் அந்த பேட்டியில் கூறினார்.
இதனையடுத்து ஆகஸ்ட் 28ம் தேதி லைகா நிறுவனம் ஜேசன் சஞ்சய் படத்தை இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இந்த படத்தில் முதலில் கதாநாயகனாக நடிக்க ஹரிஷ் கல்யான், அதர்வா, கவின் ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடந்ததினர் .
இதையடுத்து சஞ்சய் இயக்கும் படத்தின் கதாநாயகனாக கவின் தேர்ந்தெடுக்கப்பட்டதாக சினிமா வட்டாரத்தினர் கூறினார்கள். அதேபோல் இப்படத்திற்கு முன்னதாக அனிருத் இசையமைக்கிறார் என்ற செய்தி பரவிய நிலையில் இப்போது யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார் எனவும் செய்திகள் வெளியாகிவுள்ளது . இதையடுத்து இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி x தளத்தில் ட்ரென்டாகி வருகிறது.
சஞ்சய், யுவன், கவின் ஆகியோர் காம்பினேஷனே வெறித்தனமாக உள்ளது. இப்போது மேலும் அந்த டீமில் விஜய் சேதுபதி இணையும் செய்தி ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது. மேலும் இதனைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போதும் வரும் என்று சினிமா ரசிகர்கள் பெரும் ஆர்வத்தில் உள்ளனர்.