காட்டுத் தீயாய் பரவும் நடிகை தீபிகா படுகோன் சமூக வலைதளப் பதிவு!

Deepika Padukone & Ranveer Singh
Deepika Padukone & Ranveer Singh

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருப்பவர் தான் நடிகை தீபிகா படுகோன். தனது தனித்துவமான நடிப்பு மற்றும் பேச்சால் தனக்கென்ற ஒரு ரசிகர் கூட்டத்தை தன்வசம் கட்டி இழுத்தவர் இவர். நேற்று  தீபிகா மற்றும் அவரது கணவர் ரன்வீரின் சமூக வலைத்தளப் பதிவு ஒன்று ரசிகர்கள் மற்றும் சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்பட்டு பேசப்பட்டு வருகிறது.

பாலிவுட் ஸ்டாராக தீபிகா:

தீபிகா, தனது கல்லூரிப் பருவத்திலேயே விளம்பரத் துறையில் ஒரு மாடலாக  மிகுந்த ஆர்வத்தோடு ஈடுபட்டார். இவரது இந்த ஆர்வமும் கடின உழைப்பும் இவருக்கு பல வெற்றி விருதுகளைத் தேடித் தந்தன. அடுத்தகட்டமாக முதன்முதலில் 2006ஆம் ஆண்டு  ‘ஐஸ்வர்யா’ கன்னடப் படத்தின் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படம் இவருக்கு மிகச்சிறந்த ஒரு வெற்றிப்படமாக அமைந்ததோடு பாலிவுட் சினிமாவிற்குள் நுழைவதற்கான நல்லதொரு வாய்ப்பாகவும் அமைந்தது. 2007 ஆம் ‘ஓம் சாந்தி ஓம்’ என்ற பாலிவுட் படத்தில் நடிகர் ஷாருகானுக்கு ஜோடியாக நடித்தார். இந்த படமும் இவருக்கு மிகச்சிறந்த வெற்றிப்படமாகவே அமைந்தது. அதோடு இந்த வெற்றியின் காரணமாக பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகர்கள் மற்றும் இயக்குநர்களால் அதிகமாக தேடப்படும் ஒரு நடிகையாக மாறினார். பின்னர் ரன்வீர் கபூர், சைப் அலிகான், அக்ஷய் குமார், ஆதித்யா சோப்ரா, அமீர் கான், ஹ்ரிதிக் ரோஷன், போன்ற பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்துள்ளார்.

Deepika Padukone & Ranveer Singh
Deepika Padukone & Ranveer Singh

ரன்வீர் சிங் – தீபிகா படுகோன்:

2013 ஆம் ஆண்டு, நடிகர் ரன்வீர் சிங் ஜோடியாக 'ராம் லீலா' படத்தில் இணைந்து நடித்தார் தீபிகா.  இப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல விமர்சனகளைப் பெற்ற  நிலையில், இவர்கள் இருவரும் தொடர்ந்து அடுத்தடுத்து 'பாஜிராவ் மஸ்தானி', 'பத்மாவத்' போன்ற படங்களிலும் இணைந்து நடித்தனர். கடந்த  2018ஆம் ஆண்டு ரன்வீர் மற்றும் தீபிகா இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

சமூக வலைத்தளப் பதிவு:

 திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நல்ல நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் தீபிகா, கடந்த ஆண்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் அறியப்பட்டார். தற்போது தீபிகா ரித்திக் ரோஷனுடன் நடித்துள்ள ‘ஃபைட்டர்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இதுதவிர, பிரபாஸ் நடித்துள்ள ‘கல்கி’  என்கிற படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று ரன்வீர் சிங் மற்றும் தீபிகாபடுகோன் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில்  தீபிகா படுகோனின் கர்ப்பம் குறித்த அறிவிப்பை ரசிகர்களுக்காக பகிர்ந்திருந்தனர். இந்த பதிவானது தற்போது சமூக ஊடகங்களுக்கும் ரசிகர்களுக்கும் மிகச்சிறந்த பேசுபொருளாக இருந்து வருகிறது.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: ஜோஷுவா இமை போல் காக்க!
Deepika Padukone & Ranveer Singh

ஊடகங்களின் சமூக அக்கறை:

பொதுமக்களிடையே சினிமா மற்றும் சினிமா நடிகர்  நடிகைகள் குறித்த செய்திகளைத் தெரிந்துகொள்வதற்கான அதிகமான ஆர்வம் இருப்பது வழக்கம் தான். அந்தவகையில் சினிமா பிரபலங்கள் சார்ந்த செய்திகளுக்கான ஆரவாரத்தை மிகைபடுத்தும் வகையில் சமூக ஊடகங்கள் செயல்பட்டு வருகின்றன.  பிரபலங்களின் ஒரு சில சாதரணமான தனிப்பட்ட விஷயங்களைக் கூட மிகைபடுத்தப்பட்ட செய்திகளாக மாற்றும் ஊடகங்கள் குறித்து பொதுமக்களிடையே கேட்டபோது...

குமரன்:

நம்முடைய நாட்டில் ஊடகங்களின் உதவியோடு பேசி சரி செய்ய வேண்டிய பிரச்சினைகள் ஏராளம் இருக்கின்றன. அவ்வாறு இருக்க இதுபோன்ற தனிப்பட்ட வாழ்க்கை சம்மந்தபட்ட செய்திகளை திரும்பத்திரும்ப பல கோணங்களிலிருந்து அலசுவது தேவையற்றது. மேலும்  தேர்தல் தேதியானது நெருங்கிக்கொண்டு இருக்கிறது. பல சர்ச்சைகள் மக்களின் பார்வையில் படாமல் மறைக்கப்படுகின்றன. அவை அனைத்தையும் வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டிய நமது ஊடகங்கள் அதை விடுத்து, ஒரு பிரபல நடிகையின் கர்ப்பம்  குறித்து இவ்வளவு ஆர்வம் காட்டுவது வேதனை அளிக்கிறது.

பர்வதவர்த்தினி:

ஒவ்வொரு பெண்களுடைய வாழ்க்கையிலுமே திருமணம், குழந்தை பெறுதல் என்பது ஒரு மைல்கல் தான். ஆனால் பிரபலங்களின் வாழ்க்கை என்று அடிப்படையில் வரும்போது  இந்தளவிற்கு ஆரவாரப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. சமூக ஊடகங்கள் அதன் பொறுப்பையும் முக்கியத்துவத்தையும் அறிந்து செயல்பட வேண்டும்.

இதையும் படியுங்கள்:
ஹாலிவுட்டில் ரீமேக்காகும் 'த்ரிஷ்யம்'..!
Deepika Padukone & Ranveer Singh

கவிபாரதி:

ஒரு பிரபலத்திற்கு குழந்தைப் பிறக்கப்போகிறது என்றால், அது ஒரு குடும்ப விஷயமாகவே முதலில் கருதப்படுகிறது. பின்னர் தான் மக்கள். ஆகையால் தான் அவர்களும் சுதாரித்துக்கொண்டு 5 அல்லது 6 மாதங்கள் கழித்து ரசிகர்களுக்குத் தெரிவிக்கின்றனர். பிறக்கும் அந்த குழந்தை குடும்பத்தின் அறவணைப்பில் மட்டுமே வாழும். நமது கண்ணில் கூட எப்போது காண்பிப்பார்கள் என்று தெரியாது. அதேபோல் நமது வாழ்த்து கோடி மக்களைத் தாண்டி அவர்களை சேருமா என்பதும் சந்தேகம்தான். சேர்ந்தால் அவர்கள் அதற்காக தனிப்பட்ட முறையில் சந்தோசப்படுவார்களா என்பதும் சந்தேகம்தான். ஆனால் திரைத் துறையினர் வாழ்த்துத் தெரிவிப்பதற்கு தனி காரணம் உள்ளது. அவர்கள் ஒன்றாக வேலைப் பார்ப்பவர்கள். ரசிகர்களாகிய நாம் பிரபலங்களின் சாதனைகளுக்கு மட்டும் ஹைப் ஆகி வாழ்த்து தெரிவிப்போம். இதுக்கு எதற்கு இவ்ளோ ஷேர்! வாட்ஸப் ஸ்ட்டேஸில் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க நம்பரும் இல்லை. இன்ஸ்டா ஸ்டோரியில் வாழ்த்தினாலும் அதைப் பார்க்க அவர்களுக்கு நேரம் இருக்காது! Wake up guys...

மேனகா:

எனக்கு சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் இருந்து தீபிகா படுகோன்  பிடிக்கும்.  தீபிகா படுகோன் கர்ப்பமாக இருக்கும் செய்தியை இணையத்தில் பார்த்தேன். அவர் மிகவும் பிரபலமான நடிகை என்பதால் அவருக்கு இவ்வளவு ஆரவாரம் தேவைதான். தன்னுடைய  கடின உழைப்பால் முன்னுக்கு வந்து இன்று மக்கள் மத்தியில் பலருக்கும் பிடித்தமான நடிகையாக இருக்கும் அவருக்கு நானும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com