அஜித் குமாரின் தம்பி மீடியாவில் தன் அண்ணனைப் பற்றி இப்படியா சொல்வது?

Ajith brother anil kumar
Ajith brother anil kumar
Published on

நடிகர் அஜித்குமாரின் சகோதரர் அனில் குமார் அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனது வாழ்க்கை அனுபவங்களையும், அதன் மூலம் கற்றுக்கொண்ட தத்துவங்களையும் பகிர்ந்து கொண்டார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது:

அனில் குமார் ஐஐடியில் படித்த பிறகு வெளிநாட்டில் வேலை செய்து நிறைய சம்பாதித்தார். ஆனால், அவரது முதல் திருமணம் தோல்வியில் முடிந்தது. அவர் தனது காதலை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டதாகவும், குழந்தை பெயர்கள் வரை முடிவு செய்திருந்ததாகவும் கூறினார். ஆனால், திடீரென அவரது காதலி அவரை விட்டுச் சென்றதால், அவர் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார். அந்த சூழ்நிலையில், அவரது கையில் துப்பாக்கி இருந்திருந்தால், அவர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு இறந்திருப்பார் என்று கூறினார்.

வாழ்க்கை பற்றிய புரிதல்:

இந்த தோல்விக்கு பிறகுதான் வாழ்க்கை என்றால் என்னவென்றே தனக்கு புரிந்தது என்று அனில் குமார் கூறினார். இப்போது யாராவது 21 வயது பையன் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்வேன் என்று சொன்னால், கன்னத்தில் அறைந்து, இதெல்லாம் வாழ்க்கையில் ஒரு தோல்வியே கிடையாது. இது போல பல பிரச்சனைகளை இந்த வாழ்க்கை முழுவதும் சந்திக்க தயாராக இரு என்று அறிவுரை கூறுவேன் என்று அவர் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்:
விஜய் மகனுக்கும் லைகாவுக்கும் என்ன பிரச்னை? அஜித் சொன்ன அந்த வார்த்தை!
Ajith brother anil kumar

அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருது:

சமீபத்தில் அனில் குமாரின் சகோதரர் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது குறித்து பேசிய அனில் குமார், தனது நண்பர் ஒருவர் அவருக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும், அப்போது அவர் "உங்களுக்கும் பத்ம பூஷன் கிடைக்கும்" என்று கூறியதாகவும், அதற்கு அவர், "பத்ம பூஷன் எல்லாம் வேண்டாம் ஜி, புண்ணியம் கிடைத்தாலே போதும்" என்று பதிலளித்ததாகக் கூறினார்.

அனில் குமாரின் தத்துவங்கள்:

அனில் குமார் தனது பேட்டியில் வாழ்க்கைக்கு தேவையான சில தத்துவங்களையும் பகிர்ந்து கொண்டார். காதல் தோல்வி என்பது வாழ்க்கையின் ஒரு பகுதிதான் என்றும், அதை எதிர்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும், தற்கொலை என்பது எந்த பிரச்சனைக்கும் தீர்வு இல்லை என்றும், வாழ்க்கையில் வரும் சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும் என்றும் அவர் அறிவுரை கூறினார்.

இதையும் படியுங்கள்:
தமிழகத்தில் அதிகமாக பரவி வரும் ஸ்கரப் டைபஸ் பாக்டீரியா!
Ajith brother anil kumar

அனில் குமாரின் இந்த பேட்டி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அவரது அனுபவங்களும், தத்துவங்களும் இளைஞர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com