சாதி, சமூகம், சினிமா: பாரதிராஜா என்னும் சமூகப் போராளி!

மூடநம்பிக்கைகளைத் தகர்த்து, சமூக நீதியைத் திரையில் உரக்கப் பேசிய பாரதிராஜாவின் தைரியமான படைப்புகள்.
சமூக நீதி|bharathiraja
சமூக நீதி|bharathirajaAI image
Updated on

மிழ்த் திரையுலக ஸ்டூடியோக்களுக்குள் இருந்தும், மேடை நாடக பாணியில் இருந்தும் விடுவித்து, தமிழ் மண்ணின் யதார்த்த கிராமியக் கதைகளை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. சினிமா வெறும் பொழுதுபோக்கு ஊடகம் என்பதைத் தாண்டி சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் கருவியாக மாற்றியதில் இவரது பங்களிப்பு மகத்தானது.

கிராமப்புற யதார்த்தமும் அழகியலும்:

செயற்கையான அரங்குகளிலும், நகரங்களை மையப்படுத்தியும் எடுக்கப்பட்டு வந்த திரைப்படங்களை கிராமங்களின் மண்வாசனைக்கும், அழகிய இயற்கைக்கும் திருப்பியவர் பாரதிராஜா. 16 வயதினிலே(1977) திரைப்படத்தில் எளிய கிராமத்து மக்களின் நிஜ வாழ்க்கையைத் திரையில் காட்டிய புரட்சிகரமான படைப்பாளி. சப்பாணி போன்ற மாற்றுத்திறனாளி பாத்திரங்களை முதன்மையாக வைத்து வெகு அழகாக கதையை நகர்த்தியவர்.

பெண்ணியம் மற்றும் விழிப்புணர்வு:

பெண்களை வெறும் கவர்ச்சிப் பொருளாகவும், அழகுப் பதுமையாகவும் மட்டுமே காட்டிய தமிழ் சினிமாவில், ஆழமான சிந்தனை கொண்ட பெண்களைக் கதாநாயகிகளாக முன்னிறுத்தியவர். கருத்தம்மா (1994) பெண் சிசுக்கொலை என்ற சமூகக் கொடுமையை சாட்டையடி போல சுட்டிக்காட்டி, பல விழிப்புணர்வுகளையும் புதிய சட்டங்களையும் கொண்டு வரத் தூண்டுகோலாக அமைந்தது.

ரஜினி, கமல் போன்ற சூப்பர் ஸ்டார்களை உலகிற்கு அடையாளம் காட்டியதுடன், புதிய நடிகர்கள், இசையமைப்பாளர்கள் (இளையராஜா, ஏ.ஆர். ரகுமான்) மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை அறிமுகப்படுத்தி தமிழ் சினிமாவின் முகத்தையே மாற்றி அமைத்தவர்.

ஜாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான குரல்:

சினிமாவை வெறும் பொழுதுபோக்கு ஊடகமாக மட்டும் பார்க்காமல் சமூக நீதிக்கான கருவியாகவும் மாற்றியவர். கிராமங்களின் இயற்கை அழகை மட்டும் காட்டாமல் அங்கு புதைந்திருக்கும் ஜாதிய பாகுபாடுகளையும், ஆணாதிக்க அடக்குமுறைகளையும் துணிச்சலுடன் வெளிப்படுத்தியவர். ஜாதிய ஒடுக்குமுறை குறித்த எந்தவொரு வெகுஜன புரிதலும் இல்லாத காலகட்டத்திலேயே, 1980 களில் ஜாதியை எதிர்த்து வேதம் புதிது(1987) ஜாதிய பாகுபாடுகள், மூடநம்பிக்கைகள் மற்றும் சமூகத்தில் மேல்தட்டு வர்க்கத்தின் போலித்தனங்களை மிக ஆழமாகச் சாடி, தைரியமாகக் கேள்விக்குள்ளாக்கி, சமூக நீதியை முன்வைத்த தமிழின் மிகச்சிறந்த ஜாதிய எதிர்ப்புத் திரைப்படங்களில் ஒன்றான வேதம் புதிதை இயக்கியவர்.

நவீன தமிழ் சினிமாவின் தொடக்கமாய் இருந்தவர்:

நவீன தமிழ் சினிமாவின் தொடக்கம் என்பது பல பரிமாணங்களைக் கொண்டது. தொழில்நுட்ப ரீதியாகவும், கதைக்கள ரீதியாகவும் தமிழ் சினிமா புதிய பாதையில் பயணிக்கக் காரணமான முக்கிய ஆளுமைகளில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவும் ஒருவர். தமிழ் சினிமாவை ஸ்டூடியோக்களின் பிடியிலிருந்து விடுவித்து, கிராமத்து மண்வாசையையும், யதார்த்தமான மனிதர்களையும் திரையில் கொண்டு வந்து நவீன சினிமாவின் அடித்தளத்தை அமைத்தவர் இவர். இவரது '16 வயதினிலே' மற்றும் 'முதல் மரியாதை' போன்ற படங்கள் இதற்கு சிறந்த உதாரணங்களாகத் திகழ்கின்றன.

சமூக நீதி|bharathiraja
சமூக நீதி|bharathirajaAI image

பாரதிராஜாவின் பெண்களும் படைப்புகளும்:

இயக்குனர் இமயம் பாரதிராஜா தமிழ்த் திரையுலகில் பெண்களின் பார்வையை, உணர்வுகளை மற்றும் சுயமரியாதையை அழுத்தமாகப் பதிவு செய்தவர். கிராமத்துப் பெண்களை அவர்களின் இயல்பான, கம்பீரமான மற்றும் வலிமையான பரிமாணங்களில் திரையில் கொண்டு வந்து புதிய சகாப்தத்தை உருவாக்கியவர்.

மாற்று சிந்தனையும், துணிச்சலும் கொண்ட ஒரு கிராமத்துப் பெண்ணின் பிம்பத்தை 'முத்தழகு' கதாபாத்திரம் (கிழக்கே போகும் ரயில்) தமிழ் சினிமாவுக்கு மிக நேர்த்தியாக வழங்கியது.

'16 வயதினிலே' படத்தில் 'மயிலு' கிராமத்துப் பெண்ணின் அடையாளமாகத் திகழ்ந்தார். அப்போதைய சூழலில் பெண்களின் ஆசைகள், கனவுகள் மற்றும் மீறல்களை மிக தைரியமாகப் பேசிய கதாபாத்திரம் இது. கோழிக்காக தெருவில் இறங்கி சண்டை போடும், 'பொம்பளையா அவ.. தஞ்சாவூரு தவிலு' என்ற அறிமுகத்துடன் வரும் 'மயில்' (ஸ்ரீதேவி) கதாபாத்திரம், ஊரே அஞ்சும் ஒருவனுக்கு எதிராகத் தன் சுயமரியாதையை காத்துக் கொள்ளும் வலிமையான பாத்திரமாக வடிவமைக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்:
ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு கடிவாளம் : இனி சென்சார் கட்டாயம்!
சமூக நீதி|bharathiraja

கிராமத்து பஞ்சாயத்தின் அநீதியான தீர்ப்புகளையும், மூடநம்பிக்கைகளையும் எதிர்த்து, தன் காதலனுடன் தைரியமாக வெளியேறும் 'ஜோதி' (ரதி அக்னிஹோத்ரி) பாத்திரம் (புதிய வார்ப்புகள்) அக்காலத்து பெண் விடுதலைக்கு சிறந்த சான்றாக இருந்தது.

பெண் சிசுக்கொலைக்கு எதிரான சமூக அவலத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட 'கருத்தம்மா' படம் பெண்களின் இருப்பையும், பெண் சக்தியின் அவசியத்தையும் மிக உருக்கமாகப் பேசியது. பெண்களின் சுயமரியாதைக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம், குடும்பத்தின் வறட்டு கௌரவங்களுக்கு எதிராகப் போராடும் பெண்கள் என இவரின் பெரும்பாலான கதைகள் பெண்களின் மையமாகவே அமைந்தன.

சமூக நீதி மற்றும் பாரதிராஜாவின் துணிச்சலான சமூகப் பார்வை

அடக்கமான, அப்பாவியான கிராமத்துப் பெண்களை மட்டுமே பார்த்துப் பழகிய தமிழ் சினிமாவுக்கு சுயமரியாதையும், துணிச்சலும் மிக்க அசல் கிராமத்துப் பெண்களை தன் திரையுலகப் படைப்புகள் மூலம் அறிமுகம் செய்தவர் பாரதிராஜா. பெண்களை வெறும் கவர்ச்சிக்கான பொருளாகக் காட்டாமல் அன்பான, கோபமான மற்றும் குடும்பத்தை நிர்வகிக்கும் ஆளுமை மிக்கவர்களாக திரையில் நிலை நிறுத்தியவர் பாரதிராஜா. தமிழ் சினிமாவில் பெண்களின் மன உணர்வுகளையும், அவர்களின் வலிகளையும், சமூகப் போராட்டங்களையும் முதன்முதலில் ஆழமாகப் பேச வைத்த பெருமை என்றுமே இயக்குனர் இமயம் பாரதிராஜாவிற்கு உண்டு.

இதையும் படியுங்கள்:
ஒரு சாதாரண மெஸ் ஓனர் முதலமைச்சர் மகனாக மாறினால்? நாளை ஓடிடி-யில் வெளியாகிறது தர்ஷனின் 'தி டெவில்'..!
சமூக நீதி|bharathiraja

சமூக அவலங்களைச் சுட்டிக்காட்டும் திரைப்படங்கள் எவ்வாறு ஒரு சமூகத்தையே மாற்றியமைக்கும் சக்தியைக் கொண்டுள்ளன என்பதை அறிந்து, சினிமாவை வெறும் பொழுதுபோக்காகப் பார்க்காமல் அதன் சமூகப் பொறுப்புணர்வுடன் நீங்கள் பார்க்கத் தொடங்குவீர்கள்.

logo
Kalki Online
kalkionline.com