"படம் பிடிக்கலையா? இந்தா பிடி 50% டிக்கெட் பணம் வாபஸ் !" வாவ்!

Movie theatre
Movie theatre
மும்பை மீனலதா

வணக்கம். ஆர். மீனலதாவாகிய அடியேன், என்னைப் பற்றிய சில வரிகளைத் தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். **சிறு வயது முதலேயே, என்னுடன் ஐக்கியமான எழுத்து, நடிப்பு, பேச்சு, பாட்டு, விளையாட்டு, பிறர்க்கு உதவுவது, புது மாதிரியாக யோசித்து ஆர்வத்துடன் செயல்படுவது போன்ற பல செயல்கள், சீனியர் சிட்டிசன் ஆன பிறகும் தொடர்கிறது. (சகலகலாவல்லி என்று அநேகர் என்னைக் குறித்து கூறுவதுண்டு😊) **கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக எழுதி வருகிறேன். **தமிழார்வம் கொண்டவள். **அனைத்தும் டிஜிட்டல் மயமாக ஆனபோதிலும், எழுத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, எழுதுவதை அதிகம் விரும்புபவள். **கட்டுரை, நேர்காணல், சிறுகதை, சமையல், மோட்டிவேஷன், நகைச்சுவைக்கதை போன்ற பல்வேறு விஷயங்களைக் குறித்து எழுதி வருகிறேன். **பத்திரிகைகள் அளிக்கும் ஆதரவு, புது விஷயம் எழுத அளிக்கும் தூண்டுதல், அவ்வப்போது அவர்கள் கொடுக்கும் அருமையான டிப்ஸ் ஆகியவைகள் எனது எழுத்தினை மேன்மேலும் மெருகூட்ட மிகவும் உதவியாக உள்ளன.

Updated on

தியேட்டரில் பார்க்கும் படம் பிடிக்கவில்லையென்றால்,  50% கட்டணம் கொடுத்தால் போதும். அதாவது, பாதிப்படம் மட்டும் பார்த்துவிட்டு வெளியே வந்தால், மீதி 50% பணம் ரிட்டர்ன். 

பாதிப்படத்திற்கும் மேல் பார்த்து வெளியே வந்தால், 25%, 30% ரிட்டர்ன்.

கொஞ்ச நேரம் மட்டுமே பார்த்துவிட்டு வந்தால், 60% பணம் வாபஸ்.  

கேட்கவே சூப்பரா இருக்குதானே! வாவ்! 

இதன் பின்னணி :

கடந்த இரண்டு வருடங்களாக, தியேட்டருக்கு வந்து படம் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதென புள்ளி விபரம் கூறுகிறது. ரிசர்வ் செய்து படம் பார்க்க சென்றபின், படம் நன்றாக இல்லையென்றாலும் வேறு வழியின்றி பார்க்கவேண்டிய கட்டாயம். இதற்கு ஒரு யோசனையை PVR INOX நிறுவனம் கண்டு பிடித்து, அறிவிப்பு செய்துள்ளது.                 

இதையும் படியுங்கள்:
தெய்வீக அம்சம் கொண்ட இந்த 5 சிலைகள் அவசியம் வீட்டில் இருக்க வேண்டும்!
Movie theatre

பி.வி.ஆர் ஐநாக்ஸ் நிறுவனத்தின்  அறிவிப்புப்படி,  ஒரு படத்தை ரசிகர்கள் எவ்வளவு நேரம் தியேட்டரில் பார்க்கிறார்களோ, அந்த அளவிற்கு மட்டுமே டிக்கட் கட்டணம் கொடுத்தால் போதும் என்பதாகும். நாடு முழுவதும் இத்திட்டம் கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்படவிருக்கிறது.

"டிக்கட் ரிசர்வ் செய்பவர்கள், டிக்கட் பணத்திற்கு மேல் 10% கூட கொடுக்கவேண்டும். ஏ ஐ கேமரா மூலம், படம் பார்ப்பவர்கள் கண்காணிக்கப்படுவார்கள். இதன் மூலம் ரசிகர்கள் வருவது, போவது என எல்லாவற்றையும் கவனித்து  டிக்கட் கட்டணம் கணக்கிடப்படும். முதலில் இத்திட்டம், பெரிய நகரங்களில் அறிமுகப்படுத்தியபிறகு, படிப்படியாக விரிவு படுத்தப்படும்" என PVR INOX நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ரெனாட் ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் சமீபத்தில் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
கேஜிஎஃப் படம்தான் அனைத்திற்கும் காரணம் – பிரசாந்த் நீல்!
Movie theatre

ரசிகர்கள் டிராபிக் காரணம், 30-40 நிமிடங்கள் தியேட்டருக்கு லேட்டாக சென்றாலும், டிக்கட்டில் சலுகை உண்டு. மொத்தத்தில் எவ்வளவு நேரம் உள்ளே அமர்ந்து படம் பார்க்கிறோமோ, அதற்கேற்றாற் போல டிக்கட் கட்டணம் கொடுத்தால் போதும்.

இது PVR INOX அரங்கில் சினிமா பார்க்கச் செல்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் எனலாம்.

என்ன மக்களே இது எப்புடீ ?

logo
Kalki Online
kalkionline.com