47 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் கமல் ரஜினி..!

Kamal and Rajinikanth
Kamal and Rajinikanth
Published on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன், தமிழ் சினிமா வரலாற்றிலேயே அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒரு கூட்டணி. தற்போது அவர்கள் ஒரு புதிய படத்திற்காக இணைகிறார்கள் என்பதை கமல்ஹாசன் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

47 ஆண்டுகளாக இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில்கூட நடிக்கவில்லை. ஆரம்ப காலத்தில், "அபூர்வ ராகங்கள்," "மூன்று முடிச்சு," "16 வயதினிலே," "அவர்கள்," மற்றும் "அலாவுதீனும் அற்புத விளக்கும்" போன்ற பல படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இருவரும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக இருப்பதால், இவர்கள் மீண்டும் ஒரே திரையில் இணைவது என்பது சினிமா உலகிற்கே ஒரு பெரும் நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

இந்த புதிய படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் ஏற்கனவே கமலுடன் "விக்ரம்" படத்திலும், ரஜினியுடன் "கூலி" படத்திலும் வெற்றிகரமாகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டணி குறித்த அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது இந்த தகவலை கமலஹாசனே உறுதிசெய்துள்ளார். சமீபத்தில் நடந்த ஒரு விருது விழாவில், இந்த அறிவிப்பை வெளியிட்டார். “நாங்கள் இருவரும் இணைவோம்,” என்று அவர் கூறியதும், பல வருட யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, சமூக வலைத்தளங்களில் புயல் வீசத் தொடங்கியது.

பல ஆண்டுகளாக, ரசிகர்களும் சினிமா பிரியர்களும் இந்த இரண்டு ஜாம்பவான்களையும் மீண்டும் ஒரே திரையில் காண ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். இருவரையும் தனித்தனியாக, அதாவது கமலுடன் 'விக்ரம்' படத்திலும், ரஜினியின் ‘கூலி’ படத்திலும், இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். அவர்தான் இந்த கூட்டணியை இணைப்பதாகக் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
கோகோ பவுடரை வைத்து தலைமுடிக்கு டை அடிக்கலாம் தெரியுமா?
Kamal and Rajinikanth

சிமா விருதுகள் மேடையில், இந்தக் கூட்டணியின் வதந்திகள் உண்மையா என்றும், படம் விரைவில் வருமா என்றும் கேட்டபோது, கமல் தனது வழக்கமான அமைதியுடன் பதிலளித்தார், “ரஜினியும் நானும் ரொம்ப காலத்துக்கு முன்னாடியே ஒண்ணா சேர வேண்டியது. வியாபார ரீதியா இது ஒரு ஆச்சரியமா இருக்கலாம். தரமான சம்பவம்னு சொல்ல முடியாது. ரசிகர்களுக்குப் பிடிச்சிருந்தா, நாங்க சந்தோஷப்படுவோம்.” இந்த ஒரு வாக்கியமே ரசிகர்கள் பல மாதங்களாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த யூகங்களை உறுதிப்படுத்தியது. இது வெறும் பேச்சு இல்லை, இது நிஜம்.

பாக்ஸ் ஆபிஸ் மோதலுக்கு இணையம் தயாராக இருந்தாலும், கமல் இந்தக் கூட்டணியைப் பற்றி ஒரு நிதானமான பார்வையைக் கொண்டிருந்தார். இது போட்டி பற்றியது அல்ல, மரியாதை மற்றும் பகிரப்பட்ட ஆர்வம் பற்றியது என்று கூறினார்.

“எனக்கு இது இன்னொரு வாய்ப்பு. நாங்கள் ஒருவரோடு ஒருவர் போட்டி போடுவோம்னு நீங்க நினைக்கலாம். ஆனா, நான் அவர்கூட வேலை செய்யறதுக்கான ஒரு வாய்ப்பா பார்க்கிறேன். அதைத் தவிர வேற எதுவும் இல்லை. நாங்கள் எப்போதும் ஒருத்தருடைய படங்களை இன்னொருத்தர் தயாரிக்கணும்னு நினைச்சுக்கிட்டு இருந்தோம்,” என்றார் கமல்.

இதையும் படியுங்கள்:
பித்ரு தோஷத்தில் இருந்து விடுப்பட மகாளய பட்சத்தில் என்ன செய்ய வேண்டும்?
Kamal and Rajinikanth

போட்டியிடுவதை விட, தங்கள் சினிமா பயணம் மற்றும் உறவை காக்கும் வகையில் ஒரு படத்தைத் தயாரிப்பதே முக்கிய நோக்கம் என்று அவர் கூறினார். வரவிருக்கும் இந்தப் படம் மிகப்பெரியதாக இருக்கும் என்று கமல் சூசகமாகத் தெரிவித்தார். “வியாபார உலகில் இதன் வசூல் அதிர்ச்சியை ஏற்படுத்தும்,” என்றார்.

ஆனால் இது ஆரம்ப கட்டம்தான். தகவல்களின்படி, இந்தப் படம் ஆரம்ப நிலையில் உள்ளது மற்றும் இப்படத்தை எடுத்து முடிக்க ஒரு வருடத்திற்கும் மேல் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com