‘ராசாவே இனியுன்னைக் காணாதே இவ்வுலகம்!’

கவிதாஞ்சலி - பாடகர் ஜெயச்சந்திரனுக்கு…
Jayachandran
Jayachandran
ரெ. ஆத்மநாதன்

எழுத்தாளர் ரெ.ஆத்மநாதன் பொருளாதாரத்திலும், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியலிலும் முதுகலைப் பட்டங்கள் பெற்றவர். கதை, கவிதை, நாடகம் என்று முத்தமிழுக்கும் பணி செய்பவர். கதை, கவிதைகளை மாத,வார, ஆன்லைன் இதழ்களில் எழுதி வருபவர். இவரின் 4 நாடகங்கள் சென்னை, திருச்சி வானொலி நிலையங்களால் ஒலி பரப்பப் பட்டன. இளங்கலை முதலாண்டு மதுரைத் தமிழ்ச்சங்கத் தேர்வில் (1972-73) மாநில முதன்மை பெற்றவர்.பட்டி மன்றம், கவியரங்கம் ஆகியவற்றில் பங்கேற்பவர். அமெச்சூர் நாடகங்களில் நடித்தவர். தமிழக அரசின் மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறையில் ஆராய்ச்சி முன்னவராகச் சேர்ந்து, அத்துறையின் பொறுப்பு இயக்குனராக ஓய்வு பெற்றவர். “தொடர்கதைகளும் முற்றும்” என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டவர்.

Updated on

கவிதாஞ்சலி - பாடகர் ஜெயச்சந்திரனுக்கு…

எர்ணாகுளத்தில் பிறவி யெடுத்த 

இனியவரே! ஜெயச் சந்திரரே!

எழிலான மொழிகளில் நீங்கள்

இசையெடுத்துப் பாடியதை 

எவ்வுலகம் போற்றிடுமே!

இதயத்தில் நிறுத்திடுமே!

சாவாப்புகழ் உம்மை

சரித்திரத்தில் புகழ்ந்திடுமே!

பதினாயிரம் பாடல்களைப் 

பாடிமுடித்தவர் நீர்!

தேசீய, மாநிலவிருதுகளை

சிறப்பாய் அடைந்தவர் நீர்!

தமிழ், மலையாளம், தெலுங்கு 

கன்னடம், இந்தியென்று 

அத்தனை மொழிகளிலும் 

அசத்திய பாடகர் நீர்!

இதையும் படியுங்கள்:
தமிழகத்தில் HMPV வைரஸின் பாதிப்பு!
Jayachandran

வசந்த கால நதிகளிலே…

மாஞ்சோலைக் கிளிதானோ…

கடவுள் வாழும் கோயிலிலே…

தாலாட்டுதே வானம்…

கவிதை அரங்கேறும் நேரம்…

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்…

என்றெல்லாம் நீர் பாடியதை

என்றைக்கும் மனம் அசைபோடும்!

காத்திருந்து… காத்திருந்து…

ராசாத்தி உன்னை…

காதல் ஒருவழிப் பாதை…

போன்ற பாடல்களால் 

ரசிகர்கள் உயிருக்குள்

நர்த்தனம் புரிபவர் நீர்!

இசையும் காற்றும் இங்குள்ளவரை

இல்லை உமக்கு மரணம்!

இதையும் படியுங்கள்:
பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் காலமானார்!
Jayachandran

‘ராசாவே இனியுன்னைக் 

காணாதே இவ்வுலகம்!’

என்றெண்ணும் போதினிலே 

இதயமும் விம்மிடுதே!

ஆனாலும் உம்பாடல்கள்…

அதற்கான நல்மருந்தாய்

இதயத்தை நீவிடுமே!

என்றைக்கும் நிலைத்திடுமே!

logo
Kalki Online
kalkionline.com