தமிழகத்தில் HMPV வைரஸின் பாதிப்பு!

HMPV Virus
HMPV Virus
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on

இந்த ஆண்டு மத்தியில் பல்வேறு கணிப்புகளின் அடிப்படையில் புது வித தொற்று நோய் பரவும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் , இந்த ஆண்டு துவக்கத்திலேயே ஹியூமன் மெட்டா நியூமோ வைரஸ் (HMPV) நோய் தொற்று பரவ ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் திங்களன்று இரண்டு பேருக்கு HMPV நோய் தொற்று உள்ளது பதிவு செய்யப்பட்டுள்ளது. பதிவான விவரங்களின் அடிப்படையில் சென்னையில் ஒருவருவருக்கும் சேலம் மாவட்டத்தில் ஒருவருக்கும் நோய் தொற்று உள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தமிழ் நாட்டில் 2 பேருக்கு இந்நோய் தொற்று இருப்பதால் இந்தியாவில் HMPV நோய் தொற்று இருப்பவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நோய் பாதித்த மூன்று மாத குழந்தை தற்போது குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளது.அங்கே மருத்துவமனையில் நோய் தொற்று உள்ள எட்டு மாத குழந்தையும் குணமடைந்து வருகிறது.குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இரண்டு மாத குழந்தை ஒன்றிற்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதையும் படியுங்கள்:
சென்னையில் HMPV வைரஸின் பாதிப்பு - "அச்சம் தேவையில்லை!"
HMPV Virus

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் திங்கள்கிழமை நடத்திய வீடியோ கான்பரன்சில் மத்திய சுகாதார செயலாளர் தலைமையில் அனைத்து மாநில சுகாதார செயலாளர்கள் கலந்துக் கொண்டனர்.HMPV வைரஸ் நிலையாக உள்ளது.அதனால் யாரும் பீதி அடைய வேண்டிய அவசியமில்லை என்று மத்திய  சுகாதாரத்துறை செயலாளர் தெளிவுபடுத்தியுள்ளார்.

 ஹியூமன் மெட்டா நியூமோ வைரஸ் (HMPV) என்பது ஒரு லேசான நடுக்கம் , சுவாசக் கோளாறை ஏற்படுத்தும் வைரஸ் ஆகும். இருமல் மற்றும் தும்மல் மூலம் இந்நோய் பரவக்கூடியது. அனைத்து வயதினருக்கும் இந்நோய் பரவினாலும் அதிகம் வயதானவர்கள் , குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களையே இது பாதிக்கிறது. ஒருவாரம் வரை உடலில் உயிர் வாழும் இந்த வைரஸ் , சிலருக்கு மட்டும் நிமோனியா போன்ற பாதிப்பை தருகிறது.

இதையும் படியுங்கள்:
இந்தியாவில் HMPV தொற்று பாதிப்பு எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது!
HMPV Virus

இது 2001 ஆம் ஆண்டு விஞ்ஞானிகளால் முதன்முதலில் கண்டறியப்பட்டாலும், 1970களில் இருந்து இது மனிதர்களிடம் பரவியதாக ஆய்வுகள் காட்டுகின்றன. உலகளவில் 4-16% கடுமையான சுவாச நோய்த் தொற்றுகளுக்கு இந்த வைரஸ் காரணமாகும், பொதுவாக நவம்பர் மற்றும் மே மாதங்களில் இந்த வைரஸ் காய்ச்சல் உச்சத்தை அடைகின்றன.

தமிழ்நாடு சுகாதாரத் துறை "இது ஒரு புதிய வைரஸ் அல்ல, இது ஏற்கனவே புழக்கத்தில் உள்ள வைரஸ் என்பதால் மக்கள் பீதி அடைய வேண்டாம், இது 2001 இல் முதன்முதலில் அடையாளம் காணப்பட்டது.பொதுவாக HMPV தொற்று தானே கட்டுப்படுத்தக் கூடியது இது நிர்வகிக்கக்கூடியது" என்று  தைரியம் கொடுத்துள்ளது.

இதையும் படியுங்கள்:
பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது!
HMPV Virus

தும்மல், இருமல் வரும்போது வாய், மூக்கை மூடுதல், கைகளை அடிக்கடி கழுவுதல், நெரிசல் மிகுந்த இடங்களில் முகக்கவசம் அணிதல், தேவை ஏற்பட்டால் சுகாதார நிலையத்துக்கு தகவல் தெரிவிப்பது போன்ற பிற சுவாச நோய்த் தொற்றுகளுக்கான தடுப்பு நடவடிக்கைகளே இதற்கும் பொருந்தும். தமிழக அரசு  காய்ச்சல் போன்ற நோய்கள் மற்றும் கடுமையான சுவாச நோய்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com